25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது

சட்டமன்ற பேரவையில் 2024-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்கவேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து “சொந்த நூலகங்களுக்கு விருது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூலகங்களின் விவரங்களை நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள், தங்களிடமுள்ள அரியவகை நூல்கள், நூலகம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், நூலகத்தின் புகைப்படம் போன்றவற்றை 9442060835, 9894923725 என்ற  அலைபேசி எண்களிலும், dloviruthunagar@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.

 மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபருக்கு ”சொந்த நூலகங்களுக்கு விருது” விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தக கண்காட்சியில் வைத்து   மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தை விரிவுபடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News