25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 08, 2024

கரிசல் இலக்கிய கழகம் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி நினைவு கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.மணி மண்டபத்தில் 06.07.2024 அன்று கரிசல் இலக்கிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி நினைவு கருத்தரங்கத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் சிறப்புரையாற்றினார்.தென் தமிழ்நாட்டில் இந்தியா முழுவதும் முழுமைக்கும் ஏற்பட்ட தாது வருட பஞ்சம் குறிப்பாக தென்தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக வறண்ட பூமியாக இருக்கக்கூடிய விருதுநகரில் இருக்கக்கூடிய பகுதிகளெல்லாம், வைகைக்கும் தாமரபரணிக்கும் இடையே இருக்கக்கூடிய இந்த வானம் பார்த்த பூமி பகுதிகளில், ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிக அழகாக பதிவு செய்தவர். ஒரு எழுத்தாளன் ஆய்வாளனாக, வரலாற்று பார்வையாளனாக, இந்த சமூகப் பொறுப்பு மிகுந்த செயல்பாட்டாளராக திகழ முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் கு.அழகிரிசாமி அவர்கள்.இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு காரணம், இன்று நாம் யாரைப் பற்றி பேசுகின்றோமோ, அவர் கல்லூரிக்கு செல்லாதவர், பள்ளியினுடைய மேல்நிலைப் படிப்பைக் கூட படிக்காதவர். ஆனால் தன்முனைப்போடு முயன்று ஒரு மிகச்சிறந்த எழுத்தாழ்மையொடு நிற்காமல், அந்த எழுத்தின் வழியாக இவ்வளவு காலம் கடந்தும், நாம் பேசுவதற்கும், இன்றும் இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கும் மிகச் சிறந்த படைப்புகளை எழுதியவர். அவருடைய அந்த வார்த்தை பிரயோகங்கள் மிக கூர்மையாக இருக்கும். கூர்மையான வசனங்களுக்கும், எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு இன்றைய மாணவர்களுக்கும், இன்றைய குழந்தைகளுக்கும், அதைவிட இன்று அவர்களுக்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கும் நிறைய இருக்கிறது. அதை நாம் நினைத்துக் கொள்வதற்காகத்தான் இன்று கு.அழகிரிசாமி அவர்களுடைய நினைவு நாள் கருத்தரங்கம். கரிசல் இலக்கிய கழகம் விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கென்று நில எல்லை இருக்கக்கூடாது. கரிசல் இலக்கிய ஆர்வலர்கள், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை இந்த மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் நாவுக்கரசர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள், “அழகிரிசாமி இன்று” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் வரவேற்புரையும், முனைவர் சத்தியபாலன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.மேலும், கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “அன்னதான வரிசையில் செயற்கை நுண்ணறிவு” என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியிடப்பட்டது.பின்னர், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் சார்பில் கு.அழகிரிசாமி நூற்றாண்டை முன்னிட்டு, இணைய வழியில் அவருடைய 110 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை “நாளும் ஒரு கதை” என்ற தலைப்பில் கதை சொல்லிய கதை சொல்லிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன்பாண்டியன், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கரிசல் இலக்கிய நிர்வாகிகள், எழுத்தாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 06, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் செல்லும் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  (05.07.2024) மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும்  செல்லும் அறிவியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக (05.07.2024) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்கு 100 மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, தூத்துக்குடி ஸ்டெம் பார்க்; மற்றும் துறைமுகத்திற்கு 100 மாணவர்களும் என மொத்தம் 250 மாணவர்கள் அறிவியல் களப்பயணம் செல்லும் 5 சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரோவின் முக்கிய மையமான திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்( VSSC ) ஏவுகணை வடிவமைப்பு, உந்துசக்திகள், திட உந்துவிசை தொழில்நுட்பம், காற்றியக்கவியல், காற்றியக்க கட்டமைப்பு மற்றும் காற்று வெப்ப அம்சங்கள், ஏவியனிக்ஸ், கணினி மற்றும் தகவல், இயந்திரவியல் போன்ற தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை குறித்தும்,மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல், ஒலிநூல், மேற்கோள் நூல்கள் குறித்தும்,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மை, நாகரீகம், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள கட்டிட அமைப்புகள், கட்டடகலை,  தொழிநுட்பங்கள் குறித்தும்,தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்காவில் மனிதனின் பரிணாம வளர்ச்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவு மையத்தில் ராக்கெட் ஏவுதல மாதிரி, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் உருவங்கள், அறிவியலில் இயற்பியல் கணக்குகளை செய்முறையாக செய்வது குறித்த மாதிரிகள், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பாதிப்புகளை விளக்கும் டிஜிட்டல் அரங்குகள், மாணவர்களுக்கு திரை காட்சிகள் மூலம் அறிவியல் குறித்து அறிவை வளர்ப்பதற்கான நவீன டிஜிட்டல் திரையரங்குகள் ஆகியவற்றையும்,பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல் மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பறவையினங்கள், பூச்சினங்கள், பட்டாம்பூச்சி இனங்கள் என காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவை எவ்வாறு மனிதன் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 06, 2024

சம்பூர்ணதா அபியான் திட்டம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரம் கல்லூரணி ஊராட்சி, எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின்; நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை அடைவதற்கான சம்பூர்ணதா அபியான் திட்டத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S அவர்கள்  (05.07.2024) தொடங்கி வைத்தார்.பின்னர், திருச்சுழி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள காரணிகளான சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், மகளிர் மேம்பாடு உள்ளிட்டவைகளில் இலக்கினை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள்; தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாகவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.தேசிய அளவில் முன்னேற விழைகிற மாவட்டங்களாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டு, 81 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலக்குகளை நிறைவேற்றும் விதமாக அதற்கான பணிகள் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான குறியீடுகளினுடைய இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய அளவில் 500 பின்தங்கிய வட்டாரங்கள் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழகத்தில் 16 வட்டாரங்கள் முன்னேற விழையும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 39 காரணிகளை குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கினை அடைவதற்கான பணிகள்;; துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு  ஆகிய துறைகள் தொடர்புடைய ஆறு காரணிகளை 100 சதவிகிதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்திட சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில திட்டங்களை எல்லாம் சேகரித்து அனைத்து தரப்பு மக்கள், பெண்கள் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் என மக்களினுடைய நலனுக்காக திட்டங்களை எல்லாம் முழுமையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இன்று திருச்சுழி வட்டாரத்துக்குட்பட்ட பொது மக்களுக்கு ஆறு குறியீடுகள் முழுமை அடைய வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும். கருவுற்ற மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாதத்துக்குள் பதிவு செய்யும் பொழுது தான் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு, ஊட்டச்சத்து குறைபாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் சரிசெய்ய முடியும்.பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்ய வேண்டும்.  இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பின், முறையாக கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.  18 வயது முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறாகும். அப்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், திருமணம் செய்து கொண்ட ஆணின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை அனைத்து பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. 2030- ல் உலகத்திலே அதிகமாக சர்க்கரை நோய் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம்  உணவு பழக்க வழக்கம். இரத்த அழுத்தம், நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது. உடல் செயலியில் இருக்கக்கூடிய ஒரு மாற்றம். முதலில் அதனை கண்டுபிடித்தது அதற்கென்று மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடத்திற்கு இரண்டு முறை ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பின்னர், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும்.  இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள்  அனைவரும்  வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.நமது பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. அந்த சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அரசு வழங்குகிறது. அந்த நிதியை பெற்று அதன் மூலம்  தொழில் செய்து, தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இந்த ஆறு குறியீடுகளை அடுத்து வரக்கூடிய மூன்று மாதங்களில் முழுமை அடைய செய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு  அது குறித்து தெரிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், சம்பூர்ணதா அபியான் என்னும் முழுமையான இயக்கத்தின் கீழ், திருச்சுழி வட்டாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு முழுமையான இயக்க பணிகளில் எனது பங்களிப்பை அளிப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், சம்பூர்ணதா இயக்கத்தின் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.

Jul 06, 2024

திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாகசிறப்பு பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில்  (05.07.2024) தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II சார்பில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில், எந்த ஊராட்சியில்  தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ச்சியாக செயல்படுகிறார்களோ அங்கு மாற்றம் வந்திருக்கின்றது.இந்தியாவினுடைய தலைநகராக இருக்கக்கூடிய டெல்லியில், சுற்றுச்சூழல் பிரச்சனை குறிப்பாக காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஒருவருடைய சராசரி ஆயுள் காலம் சில ஆண்டுகள் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் சம்பந்தமான மருத்துவரிடம் போகக்கூடிய நோய்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 100 பேர் இருந்தால் அது சராசரியாக 120 முதல் 130 நபராக உயர்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நாம் எரிக்கக் கூடிய குப்பைகள்.சராசரியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஓர் ஆண்டுக்கு குறிப்பாக சுகாதார கேடுகளால் பரவக்கூடிய தொற்றுநோய் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்போக்கு, காலரா மாதிரியான நோய்களினால் வருடத்திற்கு குறைந்தபட்சம் 15 ல் இருந்து 20 நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் போகிறார்கள். இது எந்தெந்த ஊர்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் குப்பையை முறையாக பராமரிக்கிறார்களோ அங்கு இந்த நாட்களினுடைய எண்ணிக்கை குறைவு. வயதானவர்கள், நோய் எதிரப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்பினால் நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தாலும், அவர்களுக்கு ஆரோக்கியத்திற்கான வேலையை செய்வது மிக மிக முக்கியமானது. சுகாதாரம் பேணுவது மற்றும் குடிநீரை வழங்குதல் ஆகியவை  உள்ளாட்சி அமைப்பினுடைய இரண்டு கைகள்.கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை அவர்களே செய்ய வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்.குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். இந்தியாவைப் போன்ற சம வளர்ச்சி உள்ள நாடுகளில் கூட குப்பைகளை சிறப்பாக கையாளுகிறார்கள். நீங்கள் நினைத்தால் அது நம் நாட்டிலும் முடியும்.நம் கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, நிதி ஆதாரங்களை அதிகம் வழங்குவது, புதிய உபகரணங்களை வழங்குவது போன்ற காரணங்களை தாண்டி இவற்றையெல்லாம் விட திடக்கழிவு மேலாண்மையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம்.இதெல்லாம் செய்ய வேண்டியது கோரிக்கையோ, வேண்டுகோளோ, அரசின் அறிவுறுத்ததோ அல்ல. இது சட்டபூர்வமானது. திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக செய்வது, அவர்களுக்கான சட்டபூர்வமான கடமை. அந்த சட்டபூர்வமான கடமைகளை எந்த உள்ளாட்சி அமைப்புகள் செய்யவில்லையோ, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கென்று தனியாக ஒரு உயர் நீதிமன்றத்தை போன்று அதிகாரம் உள்ள நீதி அமைப்பு இருக்கின்றது. அது பசுமை தீர்ப்பாயம். அந்த தீர்ப்பாயத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பணி சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீவிரமாக ஆய்வு செய்து அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிப்பது.தினந்தோறும், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தால், அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுமாடு குறித்து தான் உள்ளது.எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். வந்திருக்கக்கூடிய ஊராட்சி தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் மற்றும் அடிப்படை கடமை இந்த இரண்டும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Jul 06, 2024

"Coffee With Collector” என்ற 75-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (05.07.2024) தனியார் பள்ளிகளில்  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”   என்ற 75-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 75-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்விபயில்வதற்குவழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Jul 06, 2024

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில விவசாயிகள் மற்றும் தோந்தெடுக்கப்பட்ட கிராம விவாசயிகள் மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 91 கிராம பஞ்சாயத்துகளில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டர்  ஒன்றிற்கு 75% மானியத்தில் ரூ.7500/- மதிப்பிற்கு வீரிய ஒட்டு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் 110 எக்டர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200/- மதிப்பில் மா/சப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற  5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 18,330 எண்கள், 75 சதவீத மானியத்தில் ரூ.150/-க்கும் மீதி ரூ.50/- பயனாளிகளின்; பங்கு தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18,000/- மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய ஒட்டு மா, கொய்யா, எலுமிச்சை, கொடுக்காபுளி, சப்போட்டா போன்ற செடிகளுடன் இடுபொருட்களும் 110 எக்டர் பரப்பிற்கு வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்   https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Jul 06, 2024

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு பெற விண்ணப்பிக்கலாம்

பொது பதிவுதாரர்களுக்கு :மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது.  தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்                                 : ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர்         : ரூ.200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி                 : ரூ.300       மாதம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு/பட்டயப்படிப்பு : ரூ.400 பட்டப்படிப்பு                    : ரூ.600உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது றறற.வnஎநடயiஎயயippர.பழஎ.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகைஅனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு :கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். SSLC மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/- HSC தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-வருமான உச்ச வரம்பு கிடையாது.வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம். வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் காhடு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும்,  உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவித்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருந்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு  எந்த வகையிலாவது உதவித்தொகை, பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.சுய உறுதிமொழி ஆவணம்ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறித்த காலத்திற்குள் இவ்வலுவலகத்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ச்சியாக உதவித் தொகை பெற்று பயன்பெறுமாறும், ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

Jul 05, 2024

இராஜபாளையம் கூட்டு உள்ளுர் திட்டக் குழும பகுதிக்கான முழுமைத் திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரியில்  (03.07.2024) விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பாக இராஜபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய   இராஜபாளையம் கூட்டு உள்ளுர் திட்டக் குழும பகுதிக்கான  முழுமைத் திட்டம் (Master Plan)  அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு வாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடியிருப்பு வீடுகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வெளியேற்றத்திற்கான வசதிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பராமரிப்புடன் கூடிய பசுமை பூங்கா, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், இராஜபாளையம் நகராட்சி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய 149.05 சதுர கி.மீ. சுற்றளவு பகுதிகளை இராஜபாளையம் கூட்டு உள்;;ர் திட்டக் குழுமப் பகுதியாக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கூட்டங்கள் வாயிலாக கருத்துக்களை பெற்றும், நகரின் புவியியல் அமைப்பு, போக்குவரத்து, மக்கள் தொகை ஆகிய தகவல்களின் அடிப்படையில் அறிவியல் சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இத்திட்டம் ஒருங்கிணைந்த திட்டம் என்பதால், ஏற்கனவே இருக்கக்கூடிய உட்கட்டமைப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைத்து செய்யப்படும்.அனைத்து துறைகளும் ஒவ்வொரு திட்டப்பணிகளையும்  மேற்கொள்ளும் போதும், மாஸ்டர் பிளானில் இருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படும். இதன் மூலம் சில நேரங்களில் ஒரு வேலையை பல முறை செய்வதை தவிர்க்க முடியும்.மாஸ்டர் பிளான் எல்லா தகவல்களையும் முறையாக ஆய்வு செய்து  பலரின் உடைய கருத்துக்களை கேட்டு, நகரத்தின் 50 ஆண்டுகால வளர்ச்சிக்கு எது சரியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு துறையின் சார்பாக முன்னேற்றத்திற்கு எது சரியாக இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் போது புதிய கருத்துக்கள் தொடர்பாக ஏதேனும் விவாதம் ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, இத்திட்டத்தினை அனைவரும் புரிந்து கொண்டு, திட்டம் முழுமை  அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (பொ) திருமதி நந்தினி, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் திருமதி நிர்மலா ராஜா, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள்  மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 05, 2024

இந்திய சுதந்திரப் போரட்டம் தொடர்பான பொருட்கள் இருப்பின் நன்கொடையாக வழங்கலாம்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 75-வது சுதந்திர தின விழா உரையின் போது அறிவித்துள்ளார்கள்.சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹ{மாயுன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அரசு அருங்காட்சியகங்கள் துறையின் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஆகையால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள் மற்றும் ஐ.என்.ஏ. அஞ்சல் தலைகள் போன்ற சுதந்திரப்போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் இருப்பின் அன்பளிப்பாக கொடுத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.அவ்வாறு, தங்கள் கைவசமுள்ள அரிய பொருட்களை சென்னை அரசு அருங்காட்சியகம் (பாந்தியான் சாலை, எழும்பூர்-08)அல்லது விருதுநகரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் (40/1, லிங்க் ரோடு, வி.வி.ஆர். அரங்கம், விருதுநகர்-01, அலைப்பேசி-99944-59521) வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் அவர்களால் வழங்கப்படும்.இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பொழுது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை கொண்டு அமையவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jul 05, 2024

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் நர்சிங் பள்ளி அல்லது கல்லூரி நிறுவனங்களின் மீது அரசு விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி குற்ற வழக்காக (Criminal Case) கருதி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாட்டில் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் ஆகும்.  இத்தகைய கவுன்சில்களின் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகளில் பயில்வதே முறையான கல்விக்கு வழி வகுக்கும். அதனால் நர்சிங் படிப்பு பயில விரும்பும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நர்சிங் பள்ளி அல்லது கல்லூரியானது அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கு www.tamilnadunursingcouncil.com/recognised_institutions.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் செவிலியர் மற்றும் மிட் ஒய்ப்ஸ் கவுன்சில் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் ஆகும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.1. Certificate Course in Auxiliary Nursing- Midwifery - 2 Years2. Diploma in General Nursing & Midwifery - 3 Years3. B.Sc., (Nursing) - 3 Yearsநர்சிங் பயிற்சி (Nursing Training)  என்ற பெயரில் பல பெரிய / சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி, நர்சிங் டிப்ளோமா மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாக மக்கள் குறை தீர்க்கும் நாளில் நேரிலும் இணையதளம் மூலமாகவும், ஏராளமான புகார்கள் சமீப காலமாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே, மேற்காணும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை மட்டும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.மேற்கூறிய படிப்புகள் தவிர அங்கீகரிக்கப்படாத படிப்புகளை அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் / கல்லூரிகளில் படித்தால் அரசுப் பணியில் சேர முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மாணவ மாணவியர்கள் எந்த ஒரு மருத்துவமனைகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட செவலியராக பணிபுரிய இயலாது மற்றும் நர்சிங் கவுன்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இயலாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறு பணிபுரிவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வந்தால் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் மற்றும் குற்ற வழக்காக (Criminal Case)  கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.எனவே, இத்தகைய நிறுவனங்கள் தானாக முன்வந்து அங்கீகாரமில்லாத பயிற்சிகளை நிறுத்திவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய நிறுவனங்களின் மீது அரசு விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி குற்ற வழக்காக (Criminal Case)  கருதி உரிய மேல்நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.மேலும், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நர்சிங் படிப்பு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்துகொள்ள 97912-60017 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 69 70

AD's



More News