25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்டம் பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகி நன்கொடை வழங்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகி நன்கொடை வழங்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் 15.07.2024 முதல் ஊரகப் பகுதியில் 255 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 45,583 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு தரமான சுவையான காலை உணவு வழங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

சிறுதானியங்கள் அடங்கிய உணவு வகைகள் மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற அந்தந்த பருவ காலங்களில் பழங்களை குழந்தைகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.  தன்னார்வலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், புரவலர்களின் பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களில் குழந்தைகளுக்கு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உ,ள் ஊரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களை வழங்கவும், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்திட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளிகளுக்கு பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை நன்கொடையாக  வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகுமாறும்,  இத்திட்டத்தினை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News