25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்டம்  3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 15.08.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் 3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 15.08.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் ஏதேனும் ஒரு போட்டித் தேர்விலாவது பங்கேற்று இருக்க வேண்டும். அத்தகைய தேர்வுக்கான அனுமதி சீட்டினை கொண்டு ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளகூகுள்படிவத்தினை http://forms.gle/CN4ey1H6Lqsdyex18  நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் இப்போட்டியில் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்கேற்கலாம். இந்த வினாடி வினா போட்டியானது விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 18.08.2024 அன்று நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2024. இதில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் தொடர்பான வினாக்கள் வெவ்வேறு சுற்றில் இடம்பெறும்.

 இந்த வினாடி வினா போட்டியானது மூன்று நிலைகளில் நடத்தப்படும். இறுதியாக வெற்றி பெறக்கூடிய குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-, இரண்டாவது பரிசு ரூ.75,000/-, மூன்றாவது பரிசு ரூ.50,000/- அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 80724-91078 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News