25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பந்தல்குடியில்  மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பந்தல்குடியில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடி முத்தாலம்மன் கோவில் திடலில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (02.08.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இம்முகாமில், பல்வேறு துறைகளிலிருந்து நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர்  அவர்கள் வழங்கினார்கள்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“மக்களுடன் முதல்வர்”  திட்டத்தின் கீழ், நடைபெறும் முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதிய தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார்கள்.தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து  அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,  அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.

எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். சட்டத்தின் படியான ஆட்சியில் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய ஒழுங்காற்றுப் பணிகள் மற்றும் அதோடு சேர்த்து வளர்ச்சி பணிகள் ஆகிய இரண்டும் ஒரு அரசினுடைய முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

மேலும், அரசினுடைய பல்வேறு சேவைகளில் மிக முக்கியமான சேவை பொதுமக்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்கு தீர்வு காண்பதே மிக முக்கியமான சேவைகளில் ஒன்று.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில்  பல்வேறு அரசினுடைய  துறைகள் தங்களது பணிகளை மேற்கொள்கிறார்கள். பொதுமக்கள் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களிலும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களிடமும் மனுக்களை நேரில் சென்று அளித்து வருகிறார்கள்.

கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் குறிப்பாக அதிகமாக பட்டாக்கள் வேண்டி மனுக்கள் வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது.மேலும், நிலுவையில் இருக்கக்கூடிய மனுக்கள் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News