25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 01, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நான்காம் நாளான இன்று உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று(29.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.நான்காம் நாளான இன்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த நிறைய மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றார்கள். நல்ல மதிப்பெண்களை பெற்றவர்கள்  அந்த மதிப்பெண்கள் தரக்கூடிய பயன்களை பெற்றார்களாக என்று பார்த்தால் 80 விழுக்காடு அவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கியும் அதற்குண்டான பலன்களை பெறவில்லை.மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.நம்முடைய குறுகிய காலக்கட்டத்தில் அதிக நேரம் படிப்பதற்காக செலவு செய்ய வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான முயற்சியை எடுக்க  வேண்டும்.மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக நீங்கள்  பன்னிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற வேண்டும். அதை விட முக்கியம் இந்திய அளவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல மதிப்பெண்களை பெற்றும் கூட நல்ல கல்லூரியில் சேரக்கூடிய வாய்ப்புகளை நிறைய மாணவர்கள் இழந்து விடுகிறார்கள்.ஒரு இளைஞன் அடையும் எந்த வருத்தமும் அவன் தலைமுறையை தாண்ட விடாமல் பார்த்து கொள்ளும் இளைஞனே சிறந்த இளைஞன். நீங்கள் அடையக்கூடிய கவலைகள், எதிர்காலம் குறித்ததோ அல்லது பெற்றோர்களை பற்றியோ, இலக்குகளை  அடைய முடியாத கவலைகளோ, பொருளாதார கவலைகளோ எதுவாக இருந்தாலும் அதை உங்களுடைய கல்வியின் மூலமாக எளிதாக  அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.உயர் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற கற்பனை இருக்கிறது. ஆனால் இது குறித்த வாய்ப்புகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. வழிகாட்டுதல் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அல்லது ஓரளவுக்கு விபரங்கள் தெரிந்து தேடக்கூடிய மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்.எந்த துறைக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான மதிப்பெண்கள் என்ன அதற்கு எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து படித்தாலே போதும்.மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமைபெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.அரசு உயர்கல்விக்கு பல நூறு கோடிகளை ஒதுக்குகிறது. இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Jul 01, 2024

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2024-2025 -க்கான பயிர் காப்பீட்டினை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)   2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு (2024-2025) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள்  அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)  மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 421/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 180/- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.304/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.360/- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.415/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1744/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.3404/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2024 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2024 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2024 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள்; வெங்காயம் பயிருக்கு 31.08.2024 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2024 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance)  அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC)  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS)  அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 01, 2024

வெடிபொருள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதில், வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நான்கு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதத்தில் மட்டும், மேற்படி சிறப்பு ஆய்வுக்குழுக்கள் மற்றும் வருவாய் துறையினரால் மட்டும் 439 பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 86 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.  மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தினரால் 258 பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 56 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறையினரால் 12 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளும் தங்களது பட்டாசு தொழிற்சாலையின் முன்பாக பெயர் பலகை வைத்திட வேண்டும் எனவும், மேற்படி பெயர் பலகையில் பட்டாசு தொழிற்சாலையின் பெயர், உரிமதாரர் பெயர், உரிம எண், உரிம வகை, உரிமம் வழங்கிய அலுவலர் மற்றும் செல்லுபடியாகும் காலம், தொழிற்சாலையில் உரிமத்தின்படி அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என கடந்த மே மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழிலக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  பல பட்டாசு தொழிற்சாலைகளில் இந்த விபரங்கள் அடங்கிய பெயர் பலகை இடம்பெறவில்லை என புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே, மேற்படி விபரங்கள் அடங்கிய பெயர் பலகையினை ஒரு வார காலத்திற்குள் பட்டாசு தொழிற்சாலையின் முன்புறத்தில் அனைவரும் அறிந்திடும் வகையில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் வைத்திட வேண்டும் என்றும், இதனை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்படும் என்றும், மேற்படி பெயர் பலகையினை ஒரு வார காலத்திற்குள் வைக்காத பட்டாசு தொழிற்சாலையின் உரிமத்தின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் சிறப்பு ஆய்வுக்குழுக்கள் மற்றும் வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகிய துறைகளால் பட்டாசு தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு,  வெடிபொருள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

Jun 29, 2024

சிவகாசி பெல் ஹோட்டலில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் ஆற்றல் திறன் கொண்ட வாழ்விடம் என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்களுக்கான பயிலரங்கம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பெல் ஹோட்டலில்  (28.06.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் ஆற்றல் திறன் கொண்ட வாழ்விடம் என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்களுக்கான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.இந்த பயிலரங்கத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்டுமானத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் , வடிவமைப்பு மூலமும், மாற்று பொருட்கள், மின் மற்றும் மின்னணு  சாதனங்களில் ஆற்றல் திறன் கொண்டவைகளை பயன்படுத்துதல் அதற்கான தொழில்நுட்பங்கள், பசுமை கட்டிடங்கள் பற்றிய அடிப்படை புரிதல், பசுமையை உருவாக்குதன் நன்மைகள் மற்றும் சவால்கள், வளங்கள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பாக ஆற்றல் திறன் மேம்பாடு மற்றும் பசுமை குடில் வாயு உமிழ்வை குறைப்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய செயல்களை மேம்படுத்துவதற்கான கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் கட்டடம் அமைப்பாளர்களுக்கு  ஈடுபாட்டை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமாகும். உலகம் முழுவதும் இன்றைக்கு அதிகமாக நடக்கக்கூடிய ஒரு கலந்துரையாடல் அல்லது விவாதம் பயிலரங்கம் என்று எடுத்துக் கொண்டால் மிக அதிக எண்ணிக்கையில் அது காலநிலை மாற்றம் பற்றியதாக தான் இருக்கிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகப்படியான எண்ணிக்கையிலான உலக பன்னாட்டு கூட்டங்கள் நடைபெறுவதும் காலநிலை மாற்றத்தை பற்றியதாக தான் இருக்கிறது.அடுத்து வரக்கூடிய 100 ஆண்டுகளில் உலகின் 5 விழுக்காடு மக்கள் நேரடியாக இந்த காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவியல் பூர்வமான தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கின்றன. நமது ஊர்களிலேயே இதற்கான பாதிப்பினை நேரடியாக நாம் பார்க்க முடிகிறது.பருவ காலத்தைத் தாண்டி திடீரென்று அதிக மழை பெய்தல், விவசாயத் துறையிலும் கூட வரக்கூடிய புதிய நோய் தாக்குதல்கள், புதுவிதமான பூச்சி தாக்குதல் காலநிலை மாற்றத்தின் உடைய ஒரு தொடர்பாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக கூறுகின்றன.இது போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவானது மிகப்பெரிய அளவில் இருக்கிறது குளிர்சாதன பெட்டி பயன்பாடு குறித்த தரவுகள் மட்டும் எடுத்து நாம் ஆராய்ந்தால் கடற்கரை ஒட்டி இல்லாத நகரங்களில் 200 நாட்கள் ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதன பெட்டிகள் இன்று 250 நாட்கள் ஓட வேண்டிய சூழல் உள்ளது.காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகத்தை பாதிக்க தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தினால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க் மிகப்பெரிய பொருளாதார வலிமை பெற்ற நாடுகள் எல்லாம் அவர்களுடைய மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காலநிலை பருவ மாற்றத்தை பற்றியும்,  அவர்களை பாதுகாப்பதை பற்றியும் மட்டுமே இருக்கிறது.இதை எல்லாம் பார்க்கும்போது இன்று நாம் அதிகப்படியாக எல்லோரும் பேச வேண்டிய தலைப்பு, செயல்பட வேண்டிய பகுதியை  நாம் குறைவாக பேசப்பட்டு, மிகக் குறைவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இன்று நாம் 80 விழுக்காடு மின் ஆற்றலை புதுப்பிக்க இயலாத சக்தி ஆற்றலின் மூலமே பெறுகிறோம். இந்த ஆற்றலை 20 சதவிகிதம் நம் பயன்பாட்டின் நேரடியான செயல்பாடுகளின் மூலம், குறைக்க முடியும். கட்டிடத் துறையை எடுத்துக்கொண்டால்,  இயற்கையாகவே சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்குமாறும்,  அந்த கட்டிடத்தினுடைய ஜன்னல்கள் இயற்கையாகவே காற்றோட்டம் உள்ளவாறும்  பயன்படுத்தும் மின் மற்றும் மின்னணு சாதனங்களில் அதிக ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை  பயன்படுத்துதல் போன்றவை மூலம் ஆற்றலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.மேலும், கட்டிடத்துறையில் பசுமை கட்டிட வடிவமைப்பிற்கு பல்வேறு தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவு போன்று துல்லியமாக ஆராய்ந்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்களும் உள்ளன. இதனை பல்வேறு நாடுகள் கடைபிடித்து அதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகள் செய்து முன்னேறி வருகின்றன.பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆற்றல் திறமைக்கு கட்டுமானங்கள் நிறைய சேர்த்த நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து எல்லாம் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டும். அதன் மூலமாக அவற்றை உங்களுடைய நுகர்வோர்களுக்கு நீங்கள் அதை கடத்த வேண்டும் இப்படி செய்வதன் மூலமாகத்தான் நாம் எதிர்காலத்தையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்ற வேறு முக்கியமான பருவநிலை கால பாதிப்புகளை நாம் சரி செய்ய முடியும்.இதனை நீங்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தும் போது, உங்களுடைய சமூகத்திற்கும், உங்களுடைய நுகர்வோருக்கும் மிகப்பெரிய பயனாக இருக்கும் அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 29, 2024

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் (28.06.2024) மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு  உணவு தயார் செய்வதற்கு பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்களை கொள்முதல் செய்யும் பொருட்டு  மாதிரி பொருட்களின்  தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன்  I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jun 29, 2024

சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (28.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டடு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மூன்றாம் நாளான இன்று சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் தினக்கூலி சம்;பளமாக பெற எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.அரிதான மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதன் மூலம் சம்பாதித்து நமது பொருளாதார நிலையையும், சமூக மரியாதையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையை சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.மத்திய, மாநில அரசு கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்து படிக்கும் போது, அங்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு. மேலும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகையும் நீங்கள் செலுத்தக்கூடிய கல்வி கட்டணத்தை விட அதிகமாகவே கிடைக்கின்றன. ஆகையால் நீங்கள் எந்த ஒரு செலவினமும் இல்லாமலும், பெற்றோர்களுக்கு கல்வி கட்டணம் குறித்த கஷ்டம் இல்லாமலேயே நீங்கள் படித்து முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை.உயர் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற கற்பனை இருக்கிறது. ஆனால் இது குறித்த வாய்ப்புகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. வழிகாட்டுதல் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அல்லது ஓரளவுக்கு விபரங்கள் தெரிந்து தேடக்கூடிய மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்.எந்த துறைக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான மதிப்பெண்கள் என்ன அதற்கு எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து படித்தாலே போதும்.மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமைபெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.

Jun 29, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மனுக்களை உடனடியாக பரிசீலனை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்  (28.06.2024) நடைபெற்றது.இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிக்கான இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 407 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.இக்கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, அதில் ஒரு நபருக்கு ரூ.10,200  மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளையும், மற்றொரு நபருக்கு ரூ.3200 மதிப்பில் காதொலி கருவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 29, 2024

‘ஒரு துளி அதிக பயிர்” திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய நுண்ணீர்பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்

‘ஒரு துளி அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1000 ஹெக்டர் பொருள் இலக்கும் 300 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு / குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் சிறு / குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம். மேலும் ‘ ஒரு துளி அதிக பயிர்” சொட்டு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மைத் திட்டத்திலும் இணைந்து பயன்பெறலாம்.  துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குறுவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25,000/- மானியமாக வழங்கப்படும் . மேலும் நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 1 கன மீட்டருக்கு ரூ.125/- என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.75,000/- மானியமாக வழங்கப்படும்.புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு / திறந்த வெளி கிணறுகளில் மோட்டார் (மின் மோட்டார், சூரிய ஒளி, டீசல் மோட்டார்) நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.15,000/- மானியம் வழங்கப்படும். நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்கு பாசன குழாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்வதற்கு அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு ரூ10,000/- வரை மானியம் வழங்கப்படும். மேலும் சொட்டுநீர் பாசனத்திற்கு தானியங்கி (Automation)  பாசன அமைப்பு நிறுவுவதற்கு 1 எக்டர் பரப்பிற்கு ரூ.20,000/- வரை மானியம் வழங்கப்படும்.மேற்காணும் திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு /குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தாங்கள் MIMIS என்ற இணையத்தின் மூலம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறுமாறுமாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்

Jun 29, 2024

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 25,300 எண்கள் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்ய ரூ.11.385/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி, வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை போன்ற 4 வகையான செடிகள் அடங்கிய தொகுப்பு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.60/- ஆகும். இத்தொகுப்பு 75% சதவீத மானியத்தில் ரூ.45/-க்கு வழங்கப்படும். பயனாளியின் பங்கு தொகை ரூ.15/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு ஊட்டச்சத்து தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.   இத்திட்டத்தில், பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 28, 2024

வேளாண்மை துறையின் மூலம் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் மற்றும் காரீப் பருவ கால பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் செந்நிலைக்குடி கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து நடத்திய கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் மற்றும் காரீப் பருவ கால பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (25.06.2024) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இயந்திரமாக்கல் திட்டத்தின்கீழ், ரூ.42,000/-  மானியத்தில்  ரொட்டவேட்டர்  இயந்திரத்தையும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீத  மானியத்தில் 12.5  கிலோ  நெல் நுண்ணூட்ட உரமும், 50 சதவீத  மானியத்தில் உயிர் உரம்  அசோஸ்பைரில்லம்  மற்றும்  பாஸ்போ பாக்டீரியா  கரைசலும், மாநில  வேளாண்  வளர்ச்சித் திட்டத்திம் நெல்லுக்குப்பின்  பயறு  என்ற  இனத்தின் கீழ்  50 சதவீத  மானியத்தில்  20  கிலோ  பாசிப்பயறுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.வேளாண்மைத்துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், உற்பத்தியில் இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்தும், அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தற்போது, விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதற்கும் அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. பந்தல் அமைப்பதற்கான மானியங்கள் அரசு வழங்குகிறது. இது போன்ற என்னென்ன மானியங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எல்லோரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.நமது மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை எல்லா காலகட்டத்திலும் லாபகரமாக செய்ய முடியாது. அது காலநிலையை பொருத்து மாறிக்கொண்டே இருக்கும். அதனால் இது போன்ற தொழில்நுட்பங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.அதற்கு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அரசின் திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.விவசாய துறை வல்லுநர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 69 70

AD's



More News