25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 27, 2024

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (26.06.2024)துவக்கி வைத்தார்.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.ஒரு வேதிப்பொருள் மாற்றத்தால் நமது உடம்பு இயங்குகிறது. அதில் ஒரு சில வேதிபொருட்கள் மாற்றத்தினால் மூளையில் சென்று, ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க வைக்கும். அப்பொழுது தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே அதனை தடுக்காவிட்டால், அதனை சார்ந்த ஒரு மனிதனாகவே மாறிவிடுவார். இதில், உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால் தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது.துருவப்பகுதிகளில், மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை. அவர்கள் வேட்டையாடி தான் உணவினை பெறுவார்கள். அதாவது விலங்கினை வேட்டையாடுவதற்காக தேடுவார்கள். அதற்கு பல நுட்பங்களை கையாண்டு தான் வேட்டையாடுகின்றன. கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கொண்டு தான் வேட்டையாடி அதன் மீது இரத்தத்தை ஊற்றி தான் வேட்டையாடுவார்கள்.அப்பொழுது விலங்கிலிருந்து முழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்து விடும். இதுபோன்று தான் ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம். இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாக இருக்கிறதோ அதே போல் போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப்பொருட்களினால் கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அது உண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதி மாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள் சிதைந்து அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும்.ஒருவருடைய வாழ்நாளில் ஆரோக்கியமாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால் அவருடைய மொத்த வாழ்நாளில் 30000 நாட்கள் வாழ்கிறார் என்றால்  அதில் 27000 நாட்களாவது ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க  வேண்டும். ஆனால், பெரும்பாலும் போதைப்பொருள்களில் அடிமையானவர்கள் ஒருநாளில் 3 மணி நேரமாவது வீணடிக்கிறார்கள்.  ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய  செல்வம் என்பது அவனது கையில் இருக்கக்கூடிய நேரம் தான். அந்த நேரத்தையும், உடலையும் முழுமையாக அளிக்கக்கூடியது போதைப்பழக்கம் தான்.திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கள்ளுண்ணாமை  என்ற குரல் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி” என்ற குறளில் மகனின் எந்த ஒரு செயலையும் பொருத்துக் கொள்ளும் தாய், ஒருவன் போதை பழக்கத்தால் மயங்கி இருக்கின்ற மகன் தன்னுடைய முகத்தை பார்ப்பதைக் கூட பெற்ற தாய் விரும்ப மாட்டார் என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், போதைப் பழக்கத்திலிருந்து ஒரு பத்து நபர்களை விடுவித்தால் நீங்கள் படித்த படிப்பிற்கும் சமுதாயத்திற்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்றும், உடலையும், மனதையும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும்,அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர்,அருப்புக்கோட்டை காரியாபட்டி, சாத்தூர் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதில் 3 அல்லது 6 வாரங்களில் சரிசெய்து விடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் அனைவரும்  ஏற்றுக்கொண்டனர்.முன்னதாக, சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தொடங்கி வைத்தார்.

Jun 27, 2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 17,398 மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல்கள் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக 2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு  நுழைவுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் ரூபாய் பத்தாயிரம் சம்பளமாக பெறுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் உடல்நிலை சரியில்லாமல், போக முடியவில்லை என்றால் அந்த சம்பளமும் குறையும்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையை சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஐஐடி, நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. வருடத்திற்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை.இதனை வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார். திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை.7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் செல்ல கட் ஆப் மதிப்பெண்கள் என்னென்ன, பாடம் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் செய்கின்ற சிறு முயற்சிகள் மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதாரம் நிலைக்கு உயர முடியும்.இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. உங்களுக்கான வாய்ப்பை சரியாக தேர்ந்தெடுத்து செயல்படுவதன் மூலம் நீங்கள் ஒரு ஐந்து வருடம் கழித்து இந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்திருக்கிறோமே என்று நீங்கள் திரும்பி பார்க்கின்ற போது ஏற்படுகின்ற வருத்தத்தை தவிக்க முடியும். ஆனால் அந்த வருத்தத்தை நீங்கள் இப்போது புரிந்து கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.இதில் பெரிய சிக்கல் என்னவென்றால் 16, 17 வயதில் 90 சதவீதம் மாணவர்களுக்கு இது புரிவதில்லை. இதனை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நோக்கில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இந்நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நுழைவுத்தேர்வுகள், தேர்வுகளுக்கு தயார் செய்து எதிர்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து,  வழிகாட்டுதல் வழங்கும் விதமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Jun 27, 2024

சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (26.06.2024) சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நான் போதைப்பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். குழந்தைகளையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன். மாவட்டத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்  என்ற கருப்பொருளை அடிப்படையாக  கொண்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.பின்னர், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சர்வதேச தினத்தை முன்னிட்டு,  விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு  அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.மேலும், போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவிக்க 04562 252525, 04562 252011 மற்றும் 04562 293946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2024

பள்ளி மாணவர்களிடையே உளவியல் ரீதியாக போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம், கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே உளவியல் ரீதியாக போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில்  (26.06.2024) நடைபெற்றது.இன்றைக்கு இருக்கக்கூடிய சமூக சூழலில் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் மிக முக்கியமான பிரச்சினைகள் என்று கேட்டால் மாணவர்களுடைய பழக்கம் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையேயான சிக்கல்களைப் பற்றி கூறுவார்கள்.இன்றைக்கு நிலவக்கூடிய சூழ்நிலையில் சமூகத்தில் போதைப் பழக்க வழக்கத்தினால் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தில் இருக்கக்கூடிய சிக்கல்களின் வடிவம் மாறிகொண்டே இருக்கிறதே தவிர இது எல்லா காலகட்டத்திலும் சமூக ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களில் அவ்வப்போது சில பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.பள்ளி மாணவர்கள் எது சரி, எது தவறு என்று ஆராயக்கூடிய பகுத்தறிவு வயதிற்கு அவர்கள் வருவதற்கு முன்பாகவே நிறைய சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள். மேலும் பல உளவியல் சார்ந்த சிக்கல்கள் நிறைய வருகின்றது. நண்பர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள், செய்யும் தவறை செய்ய மறுக்கும் நண்பர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகின்றது என்ற உளவியல் சார்ந்த சிக்கல்களை மாணவர்கள் சந்திக்கின்றனர்.அந்த உளவியலில் இருந்து மாணவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. உன்னை பிடிக்காமல் போவதை எதிர் கொள்வதற்கான தைரியத்தை நீ வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு இது குறித்து தொடர்ச்சியாக எடுத்துக்கூறி நல்வழி படுத்த வேண்டும். மேலும், போதை பழக்க வழக்கத்தினால் வரும் பிரச்சனையை கூறும்பொழுது, மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். மாணவர்கள் ஓய்வு நேரங்களில் விளையாட்டு, மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகள் உள்ளிட்ட மகிழ்ச்சியை தரக்கூடிய  பல்வேறு காரணிகள் குறித்து அறிமுகம் செய்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.போதை பொருட்கள் மூலமாக உடல் உறுப்புகளை சிதைத்து, போதை கிடைப்பதற்காக தன்னைதானே அழித்துக்கொள்கின்றனர் என்ற உண்மையை புரிந்துகொள்ள செய்ய வேண்டும்.நமது மாவட்டத்தில் போதைப்பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுக்கும் விதமாக விருதுநகர், காரியாபட்டி மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் அரசு மறுவாழ்வு மையம் செயல்படுகின்றன.  நவீன மருத்துவ முறைகள் மூலமாக அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கும் போது நிச்சயமாக போதை பழக்கவழக்கத்திற்கு எதிரான ஒரு மனிதராக வாழ்நாள் முழுவதும் விளங்க முடியும்.நாளை நம்முடைய  சந்ததியினர் வாழப்போகும் இந்த பூமியில் இது போன்ற எதிர்மறை காரணிகள் உள்ள இந்த உலகை நேர்மறையாக மாற்ற தொடர்ச்சியாக நாம் செயல்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களாகிய நீங்கள்  மிக உறுதுணையாகவும், முறையான கண்டிப்போடும், கவனத்தோடும் இதை அணுகினால் நிச்சயமாக நமது மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களை நல்வழிபடுத்த முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 225 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2024

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.06.2024 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவசதையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான மனுக்களை தேவையான ஆவணங்களுடன் (ஆதார் அட்டைநகல், குடும்பஅட்டைநகல், புகைப்படம், வங்கிகணக்கு புத்தகம்) இணைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரம் பெறுவதற்கு மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலக தொலைபேசிஎண்: 04562-252068-யை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Jun 27, 2024

பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியான நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம  விருதுகளை ( பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ) வழங்க  அறிவித்துள்ளதகலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க  அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருதுகள்  தொழில்,  இனம்,  உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.மேலும், இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க  https://awards.gov.in  மற்றும் https://padmaawards.gov.in  என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களுடன் 27.06.2024- ஆம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 26, 2024

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள்  (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும்,  தோப்பூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.10.16 இலட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் தர்மபுரம் கிராமத்தில், 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.7.88 இலட்சம் மதிப்பில்  10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வருவதையும்,பின்னர், அத்திக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.9.77  இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு வருவதையும்,  அத்திக்குளம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.5.18 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும்,புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் புதுப்பட்டி ஊராட்சியில்மகாத்மாகாந்திதேசியஊரகவேலைஉறுதித்திட்டத்தின் கீழ், ரூ.3.65 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Jun 26, 2024

தோப்பூர் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் குழந்தைகள் மையம் திறப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சி, அத்திக்குளம் கிராமத்தில், இண்டஸ் இண்ட் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பிரதான் நிறுவனம் மூலம் ரூ.10.28 மதிப்பில்  சீரமைக்கப்பட்ட குழந்தைகள் மையத்தினை மாவட்ட   ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் (25.06.2024) திறந்து வைத்தார்.

Jun 26, 2024

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலவரிய உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை4. கல்வி உதவித்தொகை5. திருமண உதவித்தொகை6. மகப்பேறு உதவித்தொகை7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்8. முதியோர் ஓய்வூதியம்மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்கள்     2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 26, 2024

இளம் பசுமை ஆர்வலர்” எனும் சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சுற்றுச்சூழல் கல்வி காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, பல்லுயிரியம்/உயிரின பன்மயம் பற்றி புரிந்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் முகாம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ."இளம் பசுமை ஆர்வலர்" எனும் இச்சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் தேவை. சுற்றுச்சூழல் அறிவியல், வாழ்வியல் கல்வி, வனவியல் கல்வி, வனவிலங்கு தொடர்புடைய ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வ பயிற்றுவிக்கும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.அரசு / அரசு சாரா துறைகளில் பணிபுரிபவர்கள் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2024-25 கல்வியாண்டில் ஏறக்குறைய 30 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருகட்டமாக முதலில் பயிற்சி வழங்கப்படும். இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 88383-49353 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகுதியானவர்கள் பதிவு செய்ய  80729 18467 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 69 70

AD's



More News