25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 25, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (24.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  முன்னதாக, சிவகாசி வட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த செல்வன் சு.சூரிய பிரகாஷ் தனது தாய், தந்தை இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தனது பாட்டியின் கண்காணிப்பில் படித்ததாகவும், தனது பாட்டியும் (24.04.2024) அன்று காலமாகிவிட்டதாகவும், தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் தொண்டு நிறுவனம் மூலம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு (பி.காம்) முடித்துள்ளேன் என்றும், தனது படிப்பிற்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு கொடுத்ததன் பேரில், அந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10,000/- க்கான காசோலையினையும்,சிவகாசி வட்டம், எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த செல்வி ர.தன்யாஸ்ரீ (3-ம் வகுப்பு), செல்வன் ர.ஜெயகணேசன் (5-ம் வகுப்பு) மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு தொகை வழங்க கோரி அவர்களின்  தாயார் திருமதி நாகம்மாள் என்பவர் மனு அளித்ததன் அடிப்படையில், அந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு செலவிற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5,000/- க்கான காசோலையினையும்,விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 1 பயனாளிகளுக்கு தலா ரூ.13,200/- மதிப்பிலான ஸ்மார்ட் கைபேசியினையும், 1 பயனாளிக்கு  ரூ.3,200/- மதிப்பிலான பிரைய்லி கைக்கடிகாரம், கருப்புக்கண்னாடி, மடக்கு ஊன்றுகோல் ஆகியவற்றையும்,இக்கூட்டத்தில், விண்ணப்பம் அளித்த சிவகாசி வட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கு உடனடி தீர்வாகவும், சாத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வின் போது தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு  தலா ரூ.12,500/- வீதம் மொத்தம் ரூ.25,000ஃ- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த சாத்தூர் வட்டம் நள்ளி கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு.கருப்பசாமி மற்றும் லேட் திரு.மாரிமுத்து ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 இலட்சம்  வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளையும்,என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.4.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த கல்லூரி மாணவர்களுக்கும், கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளி மாணவர்களுக்கும், என வெற்றி பெற்ற 12 பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

Jun 25, 2024

மகளிர் சுயஉதவிக்குழுவின் சிறுதானிய உணவகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (24.06.2024) திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  தேசிய மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்;, மதி சிறுதானிய உணவகம் அமைக்க மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததன் தொடர்ச்சியாக, மதி சிறுதானிய உணவகம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில்,  அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சூலக்கரை சரஸ்வதி மகளிர் சுய உதவிக்குழுவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திருமதி பேச்சியம்மாள், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 25, 2024

“கற்பித்தல் கலை மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள்” என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா(TANFAMA) அரங்கத்தில் (24.06.2024) சிவகாசி கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு “கற்பித்தல் கலை  மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள்” என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பில் பேராசிரியர் சிவகாசி மு.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய ஒருவரின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் உள்ளது.ஒவ்வொரு நிமிடமும் புதிதாக கற்றுக் கொள்வதற்கு உலகம் முழுவதும் இணையவழியில் கற்க, கற்பித்தல் செய்யக்கூடிய அமைப்புகள் மிக எளிதாக உருவாகி கொண்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் புதிதாக தொடங்கக்கூடிய மென்பொருள் உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் கல்வி சார்ந்துதான் இருக்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் இணையவழியில்; பாடங்களை நடத்தக்கூடிய சூழலில் இருக்கின்றன.உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும், அது அந்த துறைக்கான பணியை சிறப்பாக செய்வதற்கான உறுதுணையாக இருக்குமே தவிர, அது ஒரு மாற்றாக அமையாது. இது எந்த பணிக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆசிரியர் பணிக்கு நிச்சயமாக பொருந்தும்.ஆசிரியர்கள் சிறந்த ஊக்குவிப்பாளர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ஆசிரியர்களின் ஊக்கத்தினால் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற வைக்க முடியும்.சமூகத்தின் அடித்தட்டு நிலை சூழ்நிலையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து கல்வியின்; மூலமாக பல தலைமுறைகளின் இடைவெளியை கடந்த வெற்றியாளர்களின் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தோற்றுவிக்க கூடிய ஒரு ஊக்குவிப்பாளராக இருந்திருக்கிறார். யார் சிறந்த ஆசிரியர் என்று பார்த்தால் கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரை சிறந்த ஆசிரியர். அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலைகளை பற்றி ஆசிரியர்களுக்கு தெரியும். கல்வியின் வழியாகத்தான் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.வெற்றி பெறுவதற்காக உள்ள அனைத்து வாய்ப்புகளிலும் மிக எளிய குறுக்கு வழி எது என்றால் அது கல்வி வழியாக வெற்றி பெறுவதும், கடின உழைப்பு மூலமாக உயர்நிலையை அடைவதும் மட்டும் தான்.நீங்கள் வழி நடத்தக்கூடிய அல்லது ஊக்குவிக்கக் கூடிய மாணவர்களில் யார் நாளை எந்தத் துறையில் சிறந்த தலைவர்கள் ஆவார்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாணவரையும், எதிர்காலத்தில் இவன்;, இவனது குடும்பம், இவன் வாழக்கூடிய நாடு எல்லாவற்றிற்கும் இந்த மாணவனால் ஒரு பயன் விளையும் என்ற நம்பிக்கையை முன்  வைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Jun 25, 2024

வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2024 அன்று நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களால்  27.06.2024 அன்று காலை 11.30 மணிக்கு விருதுநகர்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில்  நடத்தப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள்,  படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன்  (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jun 25, 2024

திருநங்கைக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.06.2024 அன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் பட்டா மாறுதல் வேண்டி மனு அளித்த திருநங்கைக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் (24.06.2024) வழங்கினார்.

Jun 25, 2024

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மக்களுக்கு டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2024-2025-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அதன்படி 02.07.2024 அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலத்திலும், 03.07.2024-அன்று காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.07.2024-அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05.07.2024-அன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.07.2024-அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 09.07.2024-அன்று இராஜபாளையம்  வட்டாட்சியர் அலுவலகத்திலும்,  10.07.2024-அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர அலுவலகத்திலும், 11.07.2024-அன்று சாத்தூர்  வட்டாட்சியர் அலுவலகத்திலும்;, 12.07.2024-அன்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.07.2024-அன்று வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது.எனவே, இம்முகாமில் கடன் தேவைப்படுவோர் கடன் தொகை பெற ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 24, 2024

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்  நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் (22.06.2014) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.92 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடி மதிப்பில் புதிய சந்தை வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும்,அதனை தொடர்ந்து, சுக்கிலநத்தத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் நுண் உர மையம் அமைக்கப்பட்டு  அருப்புக்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகளையும்,பின்னர், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ்; ரூ.2.97 கோடி மதிப்பில் கழிவு நீரேற்றும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்  முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Jun 24, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேராத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உயர்கல்வி சேராத பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, குறிப்பிட்ட துறைக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாத மாணவர்களுக்கு வழிக்காட்டும் விதமாக மூன்றாம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 30 மனுக்களை பெற்றுக்கொண்டு, உயர்கல்விக்கு சேராத மாணவர்களிடம் சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து  மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.மேலும், பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவில் செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அருகில் இருக்க கூடிய அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதால் செலவினங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு. அதற்கும் மேலாக  முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளே படிப்பு செலவினங்களை ஏற்றுக்கொள்கிறது.எனவே மாணவர்கள் அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் உதவித்தொகை  கிடைப்பதற்கானவாய்ப்புகள்உள்ளது.கல்லூரியில் சேர்ந்த பின்பு மாணவர்கள் கல்வி கற்பது  மிகவும் கடினமாக இருக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தில்  உள்ளனர். பள்ளி படிப்பைவிட கல்லூரி படிப்புதான் மிகவும் எளிதாக உள்ளது.  கல்லூரி படிப்பின் போது பகுதி நேரம் வேலை செய்து கொண்டு கல்வி கற்கும் மாணவர்களும் உள்ளனர். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கல்லூரியில்  மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இருக்ககூடிய அறியாமையை போக்குவதுதான் ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Jun 24, 2024

108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.06.2024) அன்று விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மொத்தம் 25 அவரச ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 இலவச அவசர சிகிச்சை ஊர்திகள் பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவைகளில் சுமார் 125 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணிகளில் முழுமையாக செயல்பட்டு  விரைந்து சென்று, சரியான சிகிச்சை அளித்து அதிக உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், கடந்த வருடம் சிறப்பாக பணியாற்றிய ஊர்தி ஓட்டுநர் திரு.தங்கச்சாமி என்பவருக்கும், மருத்துவ உதவியாளர் திருமதி அருணா என்பவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட 108  இலவச அவசர சிகிச்சை ஊர்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கருப்பசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Jun 24, 2024

இரத்தான முகாம்

விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில்  (23.06.2024) நடைபெற்ற இரத்தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

1 2 ... 43 44 45 46 47 48 49 ... 69 70

AD's



More News