விருதுநகர் மாவட்டத்தில், புதிய கட்டிடங்களில் துவக்கப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் மற்றும் திருச்சுழி அரசு கலைக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, கூடுதல் நகரப் பேருந்து வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கு இயக்கப்படுகின்ற நகரப் பேருந்துகளின் விபரங்கள் பின்வருமாறு:1. திருவில்லிப்புத்தூர் அரசு கலைக்கல்லூரி: திருவில்லிப்புத்தூரிலிருந்து - காலை: 08.20, 08.50, 09.15 அட்டைமில்லிலிருந்து - மாலை: 15.30, 15.40, 15.45 இராசபாளையத்திலிருந்து - காலை: 08.52 கல்லூரியிலிருந்து - மாலை: 16.00கான்சாபுரத்திலிருந்து காலை 07.20 மணிக்குப் புறப்பட்டு வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், திருவில்லிப்புத்தூர் வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு வழியாக நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.2. திருச்சுழி அரசு கலைக் கல்லூரி:அருப்புக்கோட்டையிலிருந்து - காலை: 09.15காரியாபட்டியிலிருந்து - காலை: 08.15,கல்லூரியிலிருந்து - மாலை: 15.35நரிக்குடியிலிருந்து கல்லூரி - காலை: 09.25, 09.35வழியாக மாலை: 15.00, 15.15 திருச்சுழியிலிருந்து கூடுதல் நடை - காலை: 09.20கல்லூரியிலிருந்து கூடுதல் நடை - மாலை: 15.35காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் இருந்து மேற்கண்ட நடைகள் 24.06.2024 முதல் இயக்கப்பட உள்ளன.3. சாத்தூர் மேட்டமலை அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியிலிருந்து - காலை: காலை: 08.05, 08.25, 08.40, 08.50, 09.00,09.05, 09.10 மதியம்: 13.40, 13.50, 14.00, 14.15, 14.25,14.40, 14.55 சாத்தூரிலிருந்து - காலை: 08.05, 08.20, 08.30, 08.45, 09.00 மதியம்: 13.30, 13.50, 14.00, 14.20, 14.30, 14.354. சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியிலிருந்து - காலை:08.00, 08.10, 08.11, 08.20, 08.30, 08.40, 08.55 மதியம்:14.35, 14.55, 15.15, 15.30, 15.40, 15.50, 16.00 திருவில்லிப்புத்தூரிலிருந்து - காலை:07.45 ,07.55, 08.10, 08.25, 08.30,08.45, 08.55, 09.00, மதியம்:14.10, 14.25,14.35,14.45,14.50,14.55,15.10,15.25, 15.30,15.35,15.40, 15.45, 16.005. அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு கீழ்க்கண்டவாறு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையிலிருந்து - காலை: 07.45, 08.35செட்டிக்குறிச்சியிலிருந்து - மதியம்: 13.45, 14.15, 14.35, 14.45மேற்கண்ட அரசு கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மேற்கண்ட அரசு நகரப் பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்தி படிக்கட்டுக் பயணத்தினைத் தவிர்க்குமாறும், மேலும் மேற்குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளின் வழித்தடம், நேரம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை குறித்த புகார்களை 94875 99132 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும்”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதுக்கு 5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்தகுழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி ”வீர்பால் திவாஸ்” அன்று அறிவிக்கப்படுவார்கள்.இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும்.இவ்விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் 31.07.2024- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் (21.06.2024) விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் விருதுநகர் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தப்பட்டது.இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு 45 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தன. இதில் 357 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். 42 மாற்றுத்திறனாளிகள் தனியார்த்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர். இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 17 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பயனாளிகள் 38 பேர் பணிநியமனம் பெற்றனர்.17 மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சி வேண்டி பதிவு செய்தனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரம், வங்கிக்கடன் மானியம் மற்றும் காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொது) திருமதி.சு.ஞானபிரபா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.செல்லக்கனி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் திரு.வெங்கடேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறிவழிகாட்டி) திருமதி.அ.பிரியதர்ஷினி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.06.2024) சிவகாசி வட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்(Instituto Nacional de Tecnología (NIT)) நுழைவு தேர்வு மூலம் இடம்பிடித்த செல்வன் S. குகன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் (21.06.2024) திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார்65மனுக்கள்பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இம்முகாமில், 25 நபர்களுக்கு திருநங்கை அடையாள அட்டைகளையும், 14 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், 9 நபர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகளையும், 4 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் என மொத்தம் 59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலாசுந்தரி, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (21.06.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திரு.ஜெயராமன் த/பெ.மூர்த்தி, இராஜபாளையம் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் இனத்தின்கீழ் ரூ.100000/- ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொடுக்காபுளி கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழ மர கன்றுகள் அடங்கிய தொகுப்பு இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி 50 சதவீத மானியத்தில் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதிக்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமை கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என தெரிவித்தார்.வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இ- வாடகை திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளான உழுகை இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், களைகருவிகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் (21.06.2024) தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சிறந்த கவிஞர்கள்,பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு படைப்பு ஊக்கத்தை தருவதற்காக தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய நிகழ்ச்சியின் தான் இளையோர் இலக்கிய பாசறை நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் திசைகள்தோறும் தமிழை கொண்டு செல்வதற்கும், மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் மூலமாக புதிய எழுத்தாளராக, கவிஞர்களாக, படைப்பாளராக உருமாற்றம் பெறுவதற்கும் மிக முக்கிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு சாதாரண அறிவியல் கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ கருத்து மாறாமல் ஒரு அழகிய நடையில் மாற்றுவதற்கு, தெரிந்த சொற்களை எப்படி லாபகரமாக கையாளுகிறீர்கள் என்பதுதான் இலக்கியமும், கவிதைகளும்.எந்த ஒரு படைப்பும் இந்த சமூகத்தில் பேசப்படாத சுமைகளை, குரல்களை பேசுகிறதா ,விளிம்பு நிலை மக்களின் குரலாக அவை பதிவு செய்யப்படுகின்றனவா என்பது முக்கியம்.மேலும், பத்தாண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய பஞ்சத்தை எல்லாம் நமது ஊர் பார்த்தது. அதாவது, அன்று தஞ்சையில் ‘நன்செய் நிலம் கொண்டு சாகுபடி ஆனது. இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது” என்ற கருத்தை கவிஞன் எழுதியிருந்தார். ஒரு சில எழுத்துக்களை மாற்றி,ஒரு பெரிய கருத்தை, வலியை இலக்கியத்தின் மூலம் மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கமாக இருந்தது. நமது கரிசல் பூமியில் எழுதப்பட்ட எத்தனையோ கவிதைகளும், கதைகளும் உள்ளன.நமது மண்ணில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த சிறு கிராமம் என்றால், இந்திய அளவில் இரண்டு ஊர்களை நினைவு வைத்துள்ளது. அதில் ஒன்று இராஜபாளையம் மற்றொன்று தூத்துக்குடி என்பதாகும். 1920,1930,1940 ஆகிய காலகட்டத்தில் சுதந்திரத்தில் முக்கியமான போராட்ட காலமாக கருதப்படுகிறது. அதில் இந்த இரண்டு ஊர்களும் முக்கியத்துவம் ஆற்றியுள்ளது. இதுபோன்ற மக்களுடைய போராட்டங்களை இலக்கியங்கள் அந்தந்த கால கட்டங்களில் பதிவு செய்வது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.சங்க இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிறகு மருவி வந்த சங்ககால இலக்கியங்களும், நீதிநூல் இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பரவியுள்ள தமிழ் சங்கம் ஆகியவை எல்லா சிக்கல்களையும் தன்னுடைய கல்வி அறிவின் மூலமாக தான் தீர்வு கண்டுள்ளது.இலக்கியங்களில் நாம் படித்து தெரிந்து கொள்வதற்கும், இலக்கியங்களின் மூலமாக அந்த காலகட்டத்தினை புரிந்து கொண்டு அதன் மூலமாக இந்த சமூகத்தில் விழுமியங்களை புரிந்து கொள்வதற்கும், விழுமியங்கள் நிறைந்த படைப்பாளர்களாக உருவாவதற்கும், இந்த சமூகத்தின் வலியை ஏழை எளிய மக்களினுடைய பாடுகளை பதிவு செய்வதற்கும், அதைவிட இலக்கியம் என்பது எப்போதும் குறிக்கோளோடும் இலக்கியத்தோடும் மட்டும் இருப்பதில்லை அது மன மகிழ்ச்சிக்கும் உரியது.தற்காலிகமாக போதைப் பொருட்கள் தரக்கூடிய மகிழ்ச்சியை விட வாசிப்பு அனுபவமும் இலக்கியமும் அதில் இருக்கக்கூடிய செல்வங்களும் நிறைய மகிழ்ச்சியை தருகின்றன. அவற்றை புரிந்து கொள்வதும் அந்த மகிழ்ச்சியினை எல்லோருக்கும் கடத்துவதும் படைப்பாளர்கள் உடைய நோக்கம். அப்படிப்பட்ட படைப்பாளர்களாக நீங்கள் இருக்கும் இடங்களில் குடும்பத்தை, சமூகத்தை சில அங்குலங்கள் உயர்த்துவதற்கு ஊக்கத்தை தரக்கூடிய படைப்பாளியாக உருவாக வேண்டும். உங்களை சிறந்த படைப்பாளர்களாகவும் அதைவிட மேம்பட்ட படிப்பாளிகளாகவும் உருவாக்குவதற்கு இந்த இலக்கியப் பட்டறை பயன்படுமேயானால் அதுதான் இந்த பட்டறையினுடைய வெற்றி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், பேராசிரியர் சிவகாசி திரு.ராமச்சந்திரன் அவர்கள் ‘மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” என்ற தலைப்பிலும், கலைமாமணி கவிஞர் கலாப்ரியா அவர்கள் “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்” என்ற தலைப்பிலும், ஒருங்கிணைப்பு அலுவலர்/திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” என்ற தலைப்பிலும், ஆசிரியர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் அவர்கள் “கண்களைத் திறந்த கதை உலகம்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவகர் அவர்கள் “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்” என்ற தலைப்பிலும், கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சோ.சிதம்பரநாதன் அவர்கள் ‘செம்மொழித் தமிழின் சிறப்பு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி செயலர் முனைவர் சிங்கராஜ் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள். அரியலூர் மாவட்டப் பதிவாளர் திரு.சு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரை வழங்கினார். பின்னர், இராஜூக்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திரு.மைதிலிராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர்வாயுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வயது வரையுள்ள திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது மூன்று வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு உடல்தகுதி ஆண்களுக்கு 152.5 செ.மீ , பெண்களுக்கு 152 செ.மீ வும் உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம். இந்த பணியிடத்திற்கு மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வினில் முதல் தகுதிச்சுற்று ஆன்லைனில் கொள்குறித்தேர்வாகவும் இரண்டாம் தகுதிச்சுற்று உடற்தகுதித் தேர்வாகவும் நடைபெறும்.இத்தேர்வுக்கு சம்பளமாக முதல் வருடம் 30,000 லிருந்து நான்காம் வருடம் 40,000 வரை வழங்கப்படுகிறது.மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.550 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில் தகுதியுள்ள பெண்கள் / ஆண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 24.06.2024, 27.06.2024, 02.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற உள்ளது.இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/pYLMnf9T38E3DZJB8 என்ற GOOGLE FORM -ஐ பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிகுழுக்களின் உறுப்பினர்களுக்கு தேவையின் அடிப்படையில் தையல், ஆரி ஒர்க்ஸ், எம்ராய்டர் மற்றும் தாங்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பேக்கிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை பற்றிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி மூலம் தொழில் கடன்கள் கொடுக்கப்பட்டு பல்வேறு வகையான தொழில்கள் செய்து வருகின்றனர்.இம்மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் புல்லலக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இதில் குழு உறுப்பினராக இருந்தால் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் இப்பூமாலை வணிக வளாகத்தில் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் விற்பனை செய்யகூடியவர்கள், சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், சூடான மற்றும் குளிர்பானங்களை விற்பனையாளர்கள், பலசரக்கு விற்பனை மற்றும் பியூட்டி பார்லர், பூ விற்பனை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழுது நீக்கம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கடை வாடகைக்கு விடப்படும்.பெண்கள் குழுவாக பொருட்கள் உற்பத்தி செய்தால் விற்பனை செய்ய முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் தினசரி, மாதம் மற்றும் ஆறு மாத காலம் ஆகியவற்றிக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்.எனவே விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.