25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 06, 2026

உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், 8,698  விலையில்லா மடிக்கணினிகளை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் பணிகளை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,   துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  (05.01.2026) உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 10 இலட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நல வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும்  8,698 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை  வழங்கினார்.உங்களை நம்பித்தான் வருங்கால தமிழ்நாடும், இந்தியாவும்,  உங்களுடைய  வீடும் இருக்கிறது.  இந்த மூன்றையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.  இந்த பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுவதற்கு தான்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.முதலமைச்சர் அவர்கள் பேசும்போது ஆணித்தரமாக சொன்னது  படியுங்கள், உங்களை பார்த்து கொள்வதற்கும் உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கும் நாங்கள் இருக்கிறோம் என்றார்.எதிர்காலம் உங்கள் கைகளில் வரவேண்டும் என்று சொல்லி உங்களை வாழ்த்தி அமர்ந்தார்  நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.எதிர்காலத்திலே மாணவர்கள் நீங்கள் எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் எதிர்கால சமுதாயம் வலுவான, அறிவு சார்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும்என்பதற்காக தான், செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டங்களையும்  அவர்கள்  வரிசைப்படுத்தி சென்றார்கள். அது எல்லாமே உங்களுக்கான திட்டம். ஆகவே அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு  எதிர்காலத்தில் மிகச் சிறந்த சாதனையாளராக வரவேண்டும்.குறிப்பாக கல்வியில் சிறந்தது தமிழ்நாடு. கல்வியிலே சிறந்தது விருதுநகர் மாவட்டம். அந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த  நீங்கள் படித்து சிறப்பான எதிர்காலத்தை பெற்று, அனைவரும் பாராட்டும்சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த மடிக்கணினிகளை நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசானது,மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்  இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில்அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது. இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து கிராம நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், "கல்வி மூலம் சமூக மேம்பாடு தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், "உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 06, 2026

கோயம்புத்தூரில் வருகிற 29.01.2026 மற்றும் 30.01.2026 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள 2026 -சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விரும்பு ஜவுளித் தொழில் முனைவோர்கள் 13.01.2026-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளிதொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், கருத்தரங்குகள் (Conference), கண்காட்சி (Exhibition), வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets) மற்றும் அழகுநயப்பு காட்சி (Fashion Show) ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.01.2026-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் ddtextilesmdu@gmail.com.மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித்தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களை பெற மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், எண்.34 விஸ்வநாதபுரம் மொயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-14. தொலை பேசி எண்கள்.82200-17071/ 82206-56182 . என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், மேற்காண் கண்காட்சியில் Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamilnadu, Technical Textiles, Sustainablity and Recycling, Raw Material/ Recycled Textile/Man Made Fibre ஆகிய காட்சியரங்குகள் பங்கு கொள்ள இருப்பதால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 03, 2026

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின் வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் (01.01.2026) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின்வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள்  திறந்து வைத்தார்.  கலைஞர் கனவு இல்லம் திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,  2025 க்குள் தமிழகத்தில் 1 இலட்சம் குடிசையில்லா வீடுகள் ஏற்படுத்துவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு வீட்டுவசதி அலகிற்கும் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் நான்கு தவணைத் தொகைகளாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 277 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2234 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது, அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்,ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில்  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின்வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திறந்து வைத்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி ஆகாசவாணி என்ற  பயனாளி,  சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், எனக்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கி, வீடு கட்டி முடிக்கப்பட்டு, தற்போது எனக்கான சொந்த வீட்டு  கனவை நனவாக்கிய  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வில்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 03, 2026

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் 14.01.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.அந்த மாவட்டங்கள், நிறுவனம்/நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப்  பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும்/அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில், Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், OFC பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதளம்  (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ(Division) தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும்.தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர், TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.மேற்படி,    https://tanfinet.tn.gov.in. என்ற இணையதளம் வழியாக 01.01.2026  முதல் 14.01.2026 வரை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044- 24965595 என்கிற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jan 01, 2026

திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனக்கோட்டம் வனவியல் விரிவாக்க மையத்தில் (31.12.2025) தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் 2024-2025 கீழ், நாவல், வாகை, புங்கன், நீர் மருது, மந்தாரை, தான்றி, சீத்தா, அத்தி, புளி, மகிழம், ஆத்தி உள்ளிட்ட சுமார் 8000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சி மொட்டைமலை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக குடியிருப்பு வீடுகள் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் வனத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 01, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 13.1.2026 அன்று நடைபெற உள்ளது .

 விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 13.1.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jan 01, 2026

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரம், செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நரிக்குடி வட்டாரம், இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மருந்தாளுநர்கள்-2, ஆய்வக நுட்புநர்நிலை (Lab Technician Gr-III)-2, செவிலியர்கள்(RCH,NCD)-6, பல்நோக்கு சுகாதாரபணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW HI Gr-II)-2, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)-4, தொழில்சார் சிகிச்சையாளார் (Occupational therapist) – 01, சிறப்பு கல்வியாளர் (Special Educator)-01 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின்            http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 29.12.2025 முதல் 14.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 01, 2026

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-ணை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் (First Level Checking) நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுபுத்ரா.I A S., அவர்கள்  (31.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Dec 31, 2025

திருச்சுழி வட்டாரப்பகுதிகளில் அரசின் பல்வேறுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

விருதுநகர்மாவட்டம்,திருச்சுழிவட்டாரப்பகுதிகளில்அரசின்பல்வேறுத்துறைகள்மூலம்செயல்படுத்தப்பட்டுவரும்நலத்திட்டங்களை(30.12.2025)செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.அதன்படி, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மசாலா தயாரிப்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.          தொடர்ந்து, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உற்பத்தி பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டி மானியத்தில் வாங்கப்பட்ட சரக்கு வாகனத்தினையும், திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.          பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சென்னிலைகுடி ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் 2023-2024-ம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிய வீடுகளை பார்வையிட்டார்.இந்த செய்தியாளர் பயணத்தின் போது திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 31, 2025

களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (30.12.2025) வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் 'நல்லோசை களமாடு' பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.அதன்படி, மாவட்டத்தில், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.அதன்படி, களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் (30.12.2025) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி,  அரசு அலுவலர்கள், சமூக நீதி விடுதிகளைச் சேர்ந்த 186 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 138 139

AD's



More News