விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காமராஜர் பூங்காவில் (17.02.2026)மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பானவிழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் துவக்கிவைத்தார்.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும்ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள்மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்நோக்கத்துடனும் பேரணி தொடங்கப்பட்டது.ஒரு வேதிப்பொருள் மாற்றத்தால் நமது உடம்பு இயங்குகிறது. அதில் ஒரு சிலவேதிபொருட்கள் மாற்றத்தினால் மூளையில் சென்று, ஒரு சில ஹார்மோன்கள் சுரக்கவைக்கும்.அப்பொழுது தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே அதனை தடுக்காவிட்டால்,அதனை சார்ந்த ஒரு மனிதனாகவே மாறிவிடுவார். இதில், உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால்தான் மகிழ்ச்சிஏற்படுகிறது.துருவப் பகுதிகளில், மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை.அவர்கள் வேட்டையாடி தான் உணவினை பெறுவார்கள். அதாவது விலங்கினைவேட்டையாடுவதற்காக தேடுவார்கள். அதற்கு பல நுட்பங்களை கையாண்டுதான்வேட்டையாடுகின்றன. கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கொண்டு தான் வேட்டையாடிஅதன் மீது இரத்தத்தை ஊற்றி தான் வேட்டையாடுவார்கள். அப்பொழுது விலங்கிலிருந்துமுழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்துவிடும்.இதுபோன்று தான் ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம்.இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாகஇருக்கிறதோஅதேபோல்போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப் பொருட்களினால்கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதுஉண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதிமாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள்சிதைந்து அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும்.ஒருவருடைய வாழ்நாளில் ஆரோக்கியமாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால்அவருடைய மொத்த வாழ்நாளில் 30000 நாட்கள் வாழ்கிறார் என்றால் அதில் 27000நாட்களாவது ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும்போதைப்பொருள்களில் அடிமையானவர்கள் ஒருநாளில் 3 மணிநேரமாவது வீணடிக்கிறார்கள்.ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய செல்வம் என்பது அவனது கையில் இருக்கக்கூடிய நேரம்தான். அந்த நேரத்தையும், உடலையும் முழுமையாக அளிக்கக்கூடியது போதைப்பழக்கம் தான்எனவும், இப்போதைப் பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ள அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்தி பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.போதை ஒழிப்பு பேரணி காமராஜர் பூங்கா முதல் காரனேசன் பெண்கள்மேல்நிலைப்பள்ளி வரை செல்லும் சாலை வழியாக பேரணி நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இர்பான்,. I A S ., அவர்கள்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர் ரமேஷ், காவல்துறை அதிகாரிகள், சிவகாசிவட்டாட்சியர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் (17.02.2026) எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புல்வாய்ப்பட்டி ஊராட்சியில் (17.02.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் (17.02.2075) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் 614 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பட உள்ளன.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1)ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS.Officeல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 30 வயதிற்குள் மிகாமல் இருக்கவேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இரு வேண்டும். (Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்,புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின்கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்ஃதற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது.விண்ணப்ப படிவம் இணையதள முகவரி www.virudhunagar.nic.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.1)விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று, கல்வித் தகுதி, சாதிச் சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்ஃ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர், அஞ்சல் - 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.02.2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி(Solar Panel Installation Technician training) வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களரகவும்இ 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18000/- முதல் ரூ.30000/-வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக ஏற்கப்பட உள்ளது.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.02.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி (சிவகாசி), 5 நகராட்சிகள் (ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர்) மற்றும் 9 பேரூராட்சிகள் என மொத்தம் 15 நகர்ப்புற அலகுகளில் உள்ள 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தவும், திறமையை வெளிக்கொணரவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் குழந்தைகளின் உடல்நலத்தை பேண வேண்டும் என்ற எண்ணத்துடனும், மாணவ செல்வங்கள் அவர்களுக்கு பிடித்த விளையாட்டிலே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடனும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.இன்றைக்கு, நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு தலா 3 தொகுப்புகள், நகராட்சி வார்டுகளுக்கு தலா 2 தொகுப்புகள், பேரூராட்சி வார்டுகளுக்கு தலா 1 தொகுப்பு என மொத்தம் 360 வார்டுகளுக்கு 627 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.இந்த ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட் பேட், வாலிபால், ஃபுட்பால், சிலம்பக் கம்புகள், கேரம் போர்டு, செஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் என 30 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், விளையாட்டுப் பொருட்களின் இருப்பு நிலை (Stock) மற்றும் விநியோகத்தை வெளிப்படையாகக் கண்காணிக்க "ஆடுகளம்" (TNSPORTS) என்ற மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீட்டைப் பயன்படுத்தி, உபகரணங்களின் பயன்பாடு மற்றும் தினசரி நிலையை "ஆடுகளம்" (TNSPORTS) செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதுபோல் நம்முடைய அருப்புக்கோட்டை நகராட்சியில் 102 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய அரசு அமைந்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 22 இலட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணிகளை சிறப்பாக செய்துள்ள நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (16.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நாராணபுரம் கிராமத்தில், ஸ்ரீ மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில், வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில், திவ்யா பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த ஐந்து நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும்,மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், வி.இலுப்பைகுளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் சிறிய அளவிலான பால்பண்ணை திட்டத்தின் மூலம் 4 சதவீத வட்டி மானியத்துடன் 3-கறவை உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் என மொத்தம் 54 இலட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 7-நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் (16.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் Tamil Nadu Urban Road Infrastructure (TURIP) 2025-2026ன் கீழ், ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.அருப்புக்கோட்டை நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளும், தெருக்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக மாறி, போக்குவரத்துச் சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சாலைகளைப் பழுதுநீக்கம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ. 21 கோடி நிதி வழங்கியுள்ளார். தற்போது நகராட்சியில் சுமார் 280 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எங்கு எல்லாம் சாலைகள் சேதமடைந்துள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்படும்.இத்தகைய மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் (16.02.2026) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வட்டார அளவிலான "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை" காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்."தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS Project) என்பது உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒரு மாநில அளவிலான முன்னோடித் திட்டமாகும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எளிதாக்குதல், அவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல், மற்றும் உரிய நேரத்தில் தேவையான நபர்களுக்குத் தகுந்த உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், 13 வட்டார மையம் மற்றும் 3 வருவாய் கோட்ட அளவில் "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்க உள்ளது. அதில், முதற்கட்டமாக அருப்புக்கோட்டையில் ரூ.16 இலட்சத்து 22 மதிப்பிலும், காரியாபட்டியில் ரூ.16 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலும், இராஜபாளையத்தில் ரு.11 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், நரிக்குடியில் ரூ.15 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலும், வெம்பக்கோட்டையில் ரூ.15 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலும், விருதுநகரில் ரு.20 இலட்சத்து ஏழாயிரம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள 6-வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் மொத்தம் 27,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில், அருப்புக்கோட்டை ஊராட்சியில் 2,733 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு என மொத்தம் 16-சேவை மையத்தினை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இச்சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். சமுதாயத்தில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு மொத்தம் 6-பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை மூலம் தசை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி சிகிச்சைகள் அளிக்கப்படும். உளவியல் ஆலோசனை (Psychological Counseling) மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.மொழி மற்றும் பேச்சு தெரபி (Speech Therapy) மூலம் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பேசும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படும். சிறப்புக் கல்வி (Special Education) மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ற பிரத்யேகக் கல்வி முறைகள் கற்பிக்கப்படும்.நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மாவட்டத்திற்கு இச்சேவை மையம் அமைவதற்கு ஏறத்தாழ ரூ.93 இலட்சத்து 59 ஆயிரம் வழங்கியுள்ளார்.எனவே, குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைவதற்கு தேவையான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செய்து வந்துள்ளார். இதனை, பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.செந்தில்வேல், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.