25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Dec 04, 2025

பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்.

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 08.12.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.  மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.   மேலும் ITI -- இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter   2) Machinist  3) MMV   4) R&AC  5) ELECTRICIAN 6) Turner 7) Welder 8) Wire man 9) Surveyor 10) COPA  மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற்நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப  மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700- முதல் ரூ.13500-வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate- NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 02, 2025

‘ உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1” முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (01.12.2025) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கிராம கலை நிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் மற்றும் ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ‘உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1” அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய கருப்பொருளாக ‘இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்” (Overcoming disruption, transforming the AIDS response) என்பதனை மையமாக வைத்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி. /எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு சேவை அமைப்புகளை மாவட்ட அளவில் ஓருங்கிணைத்து எச்.ஐ.வி தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை அளித்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் எச்.ஐ.வி புதிய தொற்றுகள் இல்லாத நிலையினை உருவாக்கிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழக சுகாதார துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும்பிற துறைகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.த.ஜெகவீரபாண்டியன் குணசேகரன்(சிவகாசி), இணை இயக்குநர்(பொ) (ஊரகம் மற்றும் மருத்துவப் பணிகள்) மரு.காளிராஜ், துணை இயக்குநர்(தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம்) மரு.ராஜன், மாவட்ட மேற்பார்வையாளர்(எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு) திரு.அய்யனார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Dec 02, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (01.12.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.           மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த திருநங்கைக்கு மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.           இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 01, 2025

இராஜபாளையம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு மற்றும் விருதுநகர் முத்தால் நகர் கூரைக்குண்டு தொடக்கப்பள்ளியில் (29.11.2025)  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக, வெளியூரில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.மேலும் திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம்  வழங்கப்பட்டுள்ள 16,10,778வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களில் 13,37,911 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 28.11.2025 வெள்ளிக் கிழமை முதல் 30.11.2025 ஞாயிற்றுக் கிழமை ஆகிய 3 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்துநடத்தப்பட்டு வருகிறது.எனவே, இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திபடிவங்களை பெற்று பூர்த்தி செய்துதிரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படிமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 29, 2025

அசோக் லேலண்ட் அறக்கட்டளை (Ashok Leyland Foundation) “சார்பில், ரோடு டு ஸ்கூல் (Road to School – RTS)” என்ற திட்டத்தினை  அமைச்சர் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு, அரசு மேல்நிலைப் பள்ளியில், (28.11.2025) அசோக் லேலண்ட் அறக்கட்டளை (Ashok Leyland Foundation) “சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ரோடு டு ஸ்கூல் (Road to School – RTS)” என்ற திட்டத்தினை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு த.தங்கம் தென்னரசு அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டினுடைய சாலை போக்குவரத்து வசதிகளுக்கு, அசோக் லேலண்ட் நிறுவனமானது வழங்கி வரும் மகத்தான சேவைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித்துறையிலே எந்தெந்த இடங்களிலெல்லாம் இந்நிறுவனத்தின் பங்களிப்பு தேவையாக இருக்கிறதோ, அதை கண்டறிந்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் 8-மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு ஏறத்தாழ 8-இலட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.          தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் ரோடு டு ஸ்கூல் என்ற திட்டமானது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனைப் போல, நம்முடைய பகுதிகளில் 161 பள்ளிகளில், 5,500 மாணவர்கள் பயனடையத்தக்க வகையில் இன்று இத்திட்டமானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் மிகப்பெரும் புரட்சி ஏற்பட்டுள்ள ஒரு துறை என்று சொன்னால் அது பள்ளிக் கல்வித்துறையே ஆகும். குறிப்பாக, நம்முடைய பகுதிகளில் பள்ளிகள் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கி.மீ தொலைவில் ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று கி.மீ தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளியும், ஏழு கி.மீ தொலைவில் ஒரு உயர்நிலைப்பள்ளியும் அமைக்கப்பட வேண்டும் என்ற அன்றைய கால திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.           ஒரு காலத்திலே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தினை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்த இந்த ரோடு டு ஸ்கூல் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இது மட்டுமல்லாமல், உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தினை உருவாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே, அசோக் லேலண்ட் நிறுவனமானது இப்பணியினை அசோக் லேலண்ட் அறக்கட்டளை மூலம் இப்பணியினை ஒரு சமுதாயப் பணியாக மேற்கொண்டு வருகிறது. நாம் அனைவரும் சமுதாயத்தால் பயன் பெற்றுள்ளோம் சமுதாயத்தால் பயன் பெற்ற நாம் அதன் ஒரு பகுதியை சமுதாயத்திற்கு அளிப்பது தான் சிறந்தது.ரோடு டு ஸ்கூல் (Road to School – RTS) திட்டம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் கணிதத் திறன்களில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதுடன், உடல்நலம், கலை மற்றும் விளையாட்டு கல்வி போன்ற வாழ்க்கைத் திறன் அடிப்படையிலான இணை–பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து முழுமையான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.          மேலும், பள்ளிகளின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சமூகங்களில் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் கல்விக்கு தடையாக இருக்கும் சமூக–பொருளாதார சவால்களை குறைப்பதற்கும், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதற்கும் வழிவகுக்கின்றன.இத்துடன், வருகை விகிதத்தை உயர்த்துதல், சுகாதார மேம்பாடு, சமூகத்தில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் சமூக அங்கத்தினர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை விரிவாக்குதல் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் மொத்தம் 161 பள்ளிகள் மற்றும் 5,500 மாணவர்கள் பயனடைய உள்ளனர். இத்திட்டம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வரை தொடரப்படவுள்ளது.  நம்முடைய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் திரு. கு.அரவிந்தன்,  முதன்மை செயல் அலுவலர்(அசோக் லேலண்ட் அறக்கட்டளை) திரு. டி. சசிக்குமார்,  திட்ட இயக்குநர்(லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன்) திரு.கிரிஷ், வளநபர்(லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன்) செல்வி ஜெயப்பிரியா, மல்லாங்கிணறு பேரூராட்சித்தலைவர் திரு.துளசிதாஸ், அரசு அலுவலர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Nov 29, 2025

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (28.11.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத வைப்புத் தொகைக்கான தீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், இந்த முகாமானது 04.10.2025 முதல் 31.12.2025 வரை 3 மாதங்கள் நடைபெறும். வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்பு தொகையாளர்கள் மற்றும் இறந்த வைப்பு தொகையாளர்களின் வாரிசுகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையினை வட்டியுடன் பெறலாம்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத சுமார் 3,48,662 கணக்குகளில் ரூபாய் 66.48 கோடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 364 கணக்குகளில் ரூபாய் 67.78 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் இருப்பினை www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, அப்பணத்தை வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ரா.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 29, 2025

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் (28.11.2025) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வர்கள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அல்லம்பட்டி சந்திப்பு சாலை வரை பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரச்சாரங்களை கூறியபடி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; தலைமையில் பாலின பாகுபாடு எதிரான பிரச்சாரம் 4.0-க்கான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, பாலின பாகுபாட்டிற்கெதிரான “புதிய எழுச்சி மாற்றத்திற்கான முயற்சி” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 29, 2025

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து, கடைசி தேதி வரை காத்திராமல், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 3 தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் திரும்பக் கொடுக்கலாம் -

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப்  படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப்  படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 28-11-2025 முதல் 30.11.2025 வரை  ஆகிய 3 தினங்களிலும் சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 16,06,999 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதுவரை, 12,44,548 கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் கடைசி தேதி வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 28.11.2025  முதல் 30.11.2025 வரை  3 தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் திரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Nov 29, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒளவையார் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு மார்ச் -8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவில் ஒளவையார் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.ஒளவையார் விருதிற்கு விண்ணப்பிக்க, தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 14.11.2025 முதல் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட வேண்டும் எனவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2025 எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.மேலும், விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரியிலோ அல்லது 04562- 252 701 என்ற தொலைபேசி வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 29, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டத்திலுள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை  www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.             மேலும், விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562 - 244 707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும், மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 138 139

AD's



More News