25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 19, 2024

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே Detain செய்யப்படும்

தமிழ்நாடு முழுவதிலும் 1,535 ஆம்னிப் பேருந்துகள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி  இயங்கி வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும்  ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.ஆனால், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இத்தகையவர்களால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அதனை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுப் போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மற்றும் விதிகளின்படி முறையாக இயங்கி வரும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களை சீர்குலைக்கும் விதமாக பயணக் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து, முறைகேடாக இயக்கி வருவதால் அரசுப் பேருந்துகளுக்கும், முறையாக இயங்கி வரும் இதர ஆம்னிப் பேருந்துகளுக்கும் கடுமையான நிதி இழப்பினை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. இவர்களின் இந்தப் போக்கு தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் முறையாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களையே சீர்குலைக்கும் விதமாக உள்ளது. மேலும், இத்தகைய பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அவர்களின்  நலனையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து 13.06.2024 அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பின் அடிப்படையிலும் இன்று முதல் (18.06.2024) பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலாச் அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக Detain செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகைய ஒரு ஆம்னிப் பேருந்தும் இனி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.எனவே, அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (சோதனைச் சாவடிகள் மற்றும் செயலாக்கப் பரிவில் பணிபுரிபவர்கள் உட்பட) உடனடியாக அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளை உடனடியாக Detain செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.        ஏற்கெனவே பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக இரத்து செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த எச்சரிக்கையை மீறி மேற்படி விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகள் இனி முடக்கப்படுவதால் பொதுமக்கள் இதில் பயணம் செய்ய இயலாது.  பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. மாறாக, அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்புடைய ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களிடமே இந்த பாதிப்பிற்கான நிவாரணத்தைப் பெற முடியும்.தமிழ்நாட்டிற்குள் முறையாக 1,535 ஆம்னிப் பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான இடர்பாடுகளும் எழ வாய்ப்பில்லை.இந்த எச்சரிக்கையை மீறி, இன்று பயணிகள் எவரேனும் அத்தகைய விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளிலிருந்து இறக்கி விடப்பட்டால், மாற்று ஏற்பாடாக அவர்களின் ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. இதுகுறித்து அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர்புடைய தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  அலுவலர்களுடனும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களையும் தொடர்பு கொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்

Jun 18, 2024

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், ஆகிய திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY)  2021-22-ம் ஆண்டிற்கு புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள்வளர்த்தெடுத்தல்திட்டம்,ஆகியதிட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகிறது.அ) புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில்; (Construction of New Grow Out Pond) ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவில் 1.5-ஹெக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.   ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரிவு பயனாளிகளுக்கு 1-ஹெக்டேர் அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.7,00,000/-ல் 60%மானியமாக ரூ.4,20,000/- வழங்கப்படும்.ஆ) நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1-அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8,00,000/-ல் 40% மானியமாக ரூ.3,20,000/- வழங்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்திட 150-ச.மீ அளவிலான இடம் போதுமானதாகும்.மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 114,B 27/1இ வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04562 - 244707 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I  A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 15, 2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்  நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (14.06.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, குல்லூர் சந்தை ஊராட்சியில், ரூ.140.06 இலட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும்  பணிகளையும்,குல்லூர் சந்தை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.50 இட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டும் பணிகளையும் மற்றும் 14-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினையும்,பின்னர், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்;பள்ளியில், ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை (SMART CLASS)  அமைக்கும்  பணியினையும்   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை) மரு.தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Jun 15, 2024

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்  காப்போம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் 10  விவசாயிகளுக்கு  50 சதவிகித மானியத்தில்  பசுந்தாள்  உர விதைகளான தக்கைப்பூண்டு விதைகளையும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்  தோட்டக்கலைத்துறையின் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.1200/- மானிய விலையிலான பழசெடி தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.35 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 70000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர்கள்”.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இன்று வேளாண்மைத்துறையின் மூலம் 10  விவசாயிகளுக்கு  50 சதவிகித மானியத்தில்  பசுந்தாள்  உர விதைகளான தக்கைப்பூண்டு விதைகளையும், தோட்டக்கலை துறை மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.1200/- மானிய விலையிலான கொய்யா, மா, எலுமிச்சை, நெல்லி மற்றும் சீதா உள்ளிட்ட பழசெடி தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.   ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு  விதைகள் (முழு விலை ரூ.2000/-  மானியம்   ரூ.1000/-  50-/-  சதவீத  மானியத்தில் வழங்கப்படுகிறது.

Jun 15, 2024

உலக இரத்தக்கொடையாளர்கள் தினம்-2024

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14.06.2024) உலக இரத்ததான தினத்தைத் முன்னிட்டு, நடத்தப்பட்ட இரத்தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, இரத்தானம் தானம் வழங்கினார். பின்னர், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில குருதிபரிமாற்றுக்குழுமம்சார்பில்நடத்தப்பட்டஇரத்ததானமுகாம்களில்அதிகமுறைஇரத்ததானம்செய்தகொடையாளர்களுக்குமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.அதன்படி, 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், வாழ்நாளில் 100 முறைக்கும் மேல் குருதி வழங்கிய கொடையாளர்களுக்கு கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம்வழங்குபவர்களைகௌரவப்படுத்துவதற்காகவே கொண்டாடபட்டு வருகிறது. உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.இந்திய அளவில் இரத்தத்திற்கான தேவை ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதிகமாக நடக்கக்கூடிய சாலை விபத்துகளினால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டிற்கு ஏறத்தாழ 1 இலட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் சுமார் 15000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.மேலும், விபத்துகளினால் காயமுற்றவர்கள், உள் காயமுற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கான அறுவை சிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பெரும்பாலான இடங்களில் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.குறிப்பாக அந்தந்த மருத்துவப் பணிகளில் எலும்பு முட்டு அறுவை சிகிச்சைகள் எல்லாம் தொடர்ச்சியாக நடக்கின்றன. அது மாதிரியான சாலை விபத்துகளில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்போது அதற்கான ரத்தம் உடனடியாக தேவைப்படும் போது அந்த ரத்தத்தை இரத்த வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.ஆனால் அவ்வாறு வழங்கப்படும் இரத்ததிற்கு மாற்றாக இரத்த தானம் சமமாக இருக்கிறது என்றால் அது குறைவாகத்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீதம்  அளவிற்கான இரத்தம் இரத்த தானம் செய்பவர்களால் மட்டுமே கிடைக்கிறது.  அதில்  நான்கில் ஒரு பகுதி தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர்களால் இரத்தானம் மூலம் கிடைக்கின்றது. நமது மாவட்டத்தில் ஏறத்தாழ 5000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு  அமைப்புகளில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் மூலமாக பெறப்படும் இரத்தத்தை தான் நாம் பயன்படுத்துகின்றோம். இந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு தேவைப்படும் இரத்த அளவில் பாதியளவுதான் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இரத்தம் தேவைப்படும் காலகட்டத்தில் இரத்தத்தை தேட வேண்டி இருக்கிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு தேவையான இரத்தத்தை பெற முடியும்.சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Jun 15, 2024

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள தகவல் பகுப்பாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்:1. தகவல் பகுப்பாளர் (Data Analyst)   பணியிடம்   - 01தொகுப்பூதியம் ரூ.18,536 /-ஒரு மாதத்திற்குகல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:அடிப்படை கல்வித்தகுதி : புள்ளியியல்/ கணிதம்/ பொருளியல்/ கணினி அறிவியல் (BCA)  பட்டப்படிப்பு சான்று பெற்று இருத்தல் வேண்டும்.பணி அனுபவம் :  கணினி சார்ந்த பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வயது வரம்பு :   42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.மேற்குரிய பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size)  28.06.2024  மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு,விருதுநகர் - 626 003.தொலை பேசி எண். 04562-293946.

Jun 15, 2024

சாத்தூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும்  சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக (19.06.2024) மாலை 04.30 மணி முதல் 6 மணி வரை சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.எனவே, சாத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள்  அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 15, 2024

மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் / தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் சிலர் தன்னிச்சையாக வேகத்தடைகளை சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி அமைத்துள்ளார்கள் என்றும்,  வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்கப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட்டு, அதனால் உயிர்சேதங்களும், கொடுங்காயங்களும் ஏற்படுகின்றன என்றும், முறையற்ற வேகத்தடைகளை தொடர்ச்சியாக கடந்து செல்லும் வாகன ஒட்டிகளுக்கு முதுகுதண்டுவடம் மற்றும் இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் இதனால் வாகனத்திலும் பழுதுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்து, உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேற்படி, புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் கோரப்பட்டதற்கு மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளையும் கண்டறிய மாவட்ட ஆட்சியர் அவர்களால் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மூலமாக குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்படி வேகத்தடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  Indian Road Congress(IRC)  அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், அவசியமற்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத்தடைகளையும்,  போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள வேகத்தடைகளை சம்மந்தப்பட்ட துறையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் ஒத்துழைப்புடன் அகற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.வேகத்தடைகள் அவசியமாக தேவைப்படும் இடங்களில், வேகத்தடைகளுக்கு பதிலாக Rumble stripe அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்தும், சாலை பாதுகாப்பிற்கு வேகத்தடை அமைக்க வேண்டிய அவசியமான நேர்வுகளில் மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் விவாதப்பொருளாக வைத்து ஒப்புதல் பெற்ற பின்புதான் சம்மந்தப்பட்ட துறையினர் Indian Road Congress(IRC) அளவீட்டின்படி வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேகத்தடைகள் ஆனது Indian Road Congress – 99-1988-ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி அமைக்கப்பட வேண்டும்.அதாவது அகலம் 3.7 மீட்டர், நடு மையம் 10 செ.மீ மற்றும் வட்டம் 17 மீட்டர்(ரேடியஸ்) என்ற அளவில் தான் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், சாலைகளில் உரிய அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்க கூடாது என்றும், அவ்வாறு அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் /தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட துறையினர் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அனுமதியின்றி வேகத்தடையினை அமைத்த அமைப்பினர் / தனி நபர் ஆகியோர்களின் சொந்த செலவிலேயே வேகத்தடைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 14, 2024

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் முன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில், 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும், அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சூடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள், தங்க அணிகலன்கள், விலை மதிப்புள்ள கல் மணிகள் என சுமார் 7,914 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.அதனை தொடர்ந்து, 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 14, 2024

நீட் தேர்வில் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.06.2024) இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அதன்படி, நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று தனது முதல் முயற்சியிலேயே முதல் இடம் பிடித்த எஸ்.சஞ்சய் ராஜ் என்ற மாணவரும், இரண்டாவது முயற்சியில் முதலிடம் பிடித்த எஸ்.சிவபிரியேசன் என்ற மாணவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி வளர்மதி,சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் திரு.சிதம்பரநாதன், பி.ஏ.சி.எம் பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.மாரிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 46 47 48 49 50 51 52 ... 69 70

AD's



More News