25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகக்கூட்டரங்கில்(12.07.2024)மாற்றுத்திறனாளிகள்நலஅலுவலகம்மூலம்மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கடன் மேளாவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சுய தொழில் புரிவதற்காக 83 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இக்கடன் வங்கி கடன் மேளாவில் 26 பயனாளிகளுக்கு தலா ரூ.6120/- வீதம் ரூ.1,59,120/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரத்தினையும், 120 பயனாளிகளுக்கு தலா ரூ.13,800/- வீதம் ரூ.16,56,000/- மதிப்பிலான திறன் பேசி (Smart Phone) களையும்  என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.18,15,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வங்கி கடன் மேளாவில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்த 4 மாற்றுத்திறனாளுக்கு உடனடி தீர்வாக ரூ.2.70 இலட்சம் மதிப்பில் சுய தொழில் தொடங்குவதற்கு, வங்கி கடன்களுக்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News