25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (31.05. 2024) பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் காமராசர் விருது வழங்கி கவுரவிக்கிறது. தமிழக அரசு காமராஜர் விருதினை சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒருமுறை வழங்கி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து  விதமான  பள்ளிகளில் இருந்தும்,  குழுக்கள் அமைத்து அதில் 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதனடிப்படையில், கிழவிகுளம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- த்திற்கான காசோலையும், மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/-த்திற்கான காசோலையும், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு  ரூ.75,000/-த்திற்கான காசோலையும்,சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கி, வரும் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இரா.வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திருமதி பெ.இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News