25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் Digital Literacy  தொடர்பான பேருந்து சேவை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் Digital Literacy தொடர்பான பேருந்து சேவை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பள்ளிக்கல்வித்துறை, Redington Foundation  மற்றும் Learning Links Foundation  சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த Digital Literacy  தொடர்பான பேருந்து சேவையினை     மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், உயர்கல்வி, போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டவும், இளம் பசுமையாளர்களை உருவாக்கவும், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப்பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கவும், தொழிற்சாலைகள், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

                அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் 5 முதல் 9 -ஆம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு  யிலும் மாணவர்களுக்கு,  Digital Literacy தொடர்பாக (MS-Office, Basics of Computer, E-mail Creation ) தொடர்பாகவும், கல்லூரி மாணவர்கள் Cyber Crime, Cyber safety மற்றும் Artificial Intelligence  தொடர்பாகவும், கிராமப்புற பொதுமக்கள்  ;  Aadhar card, Pan card, Digital Money Transfer  தொடர்பாகவும்,  அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் Digital Literacy  தொடர்பான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு,Redington Foundation, Learning Links Foundation சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.  தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அடிப்படையான கணினி தொழில்நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்கள் Digital Literacy பயிற்சி மூலமாக அறிந்து பயன்பெற முடியும்.

தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இணையவழி குற்றம் என்றால் என்ன? அதில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி?  இணையவழி பாதுகாப்பு தொடர்பான படிப்புகள் குறித்தும், தொழில்நுட்ப கல்வியறிவு குறித்தும், இணையவழி குற்றங்களிலிருந்து மாணவர்கள் தங்களையும், தங்களுடைய தரவுகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன.

 மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும். AI தொழில்நுட்பம் Machine Learning  என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இது எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மேம்பட்ட Automation மற்றும் இயந்திரங்கள், தானாக முடிவெடுக்கும் திறன்கள் வளர்ச்சி பெறும். AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.  எனவே,AI  தொழில்நுட்பம் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த Digital பேருந்தானது, மாவட்டம் முழுவதும் 5 வருடத்திற்கு தொடர்ந்து இயக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளது. 2024 -2025 ஆம் ஆண்டில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்திலும், 2025-2026 விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரத்திலும், 2026-2027 திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் வட்டாரத்திலும், 2027-2028  அருப்புக்கோட்டை, நரிக்குடி வட்டாரத்திலும், 2028-2029  காரியாபட்டி, திருச்சுழி  வட்டாரத்திலும் Digital பேருந்து இயக்கப்பட்டு, Digital Literacy தொடர்பான சேவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த பயிற்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் தெரிவித்தார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News