25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிளவுக்கல் பாசன திட்டம் - தண்ணீர் திறப்பு விவரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிளவுக்கல் பாசன திட்டம் - தண்ணீர் திறப்பு விவரம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து  இரண்டாம் போக பாசனத்திற்கு 16.05.2024 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை (அரசாணை எண். (வாலாயம்) 254 நாள். 15.05.2024) வெளியிடப்பட்டுள்ளது.
பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்பொழுது 62.27 மில்லியன் கனஅடி நீரும், 133 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 81.96 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது.  மேலும், பெரியாறு அணைக்கு வினாடிக்கு 8.53 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 4.13 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவுக்கல் பாசன திட்டத்தின் பயன்பெறும் பாசன பரப்பு மொத்தம் 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டேர்) ஆகும்.
தற்பொழுது  இரண்டாம் போக பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 16.05.2024 முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவுக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 5 கண்மாய்களின் 926 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய 4 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.விவசாயிகள் அனைவரும் அதிக மகசூலைப் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News