25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விருது தேர்வுக்குழு கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விருது தேர்வுக்குழு கூட்டம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பறிய பங்களிப்பினை மேற்கொண்ட தனிநபர்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை வழங்க கடந்த 26.10.2021 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.

                இவ்விருதில், விருதுநகர் மாவட்டத்திற்கு 3 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்க வேண்டி கடந்த 29.12.2023 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு,இது தொடர்பாகதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

                விருதுநகர் மாவட்டத்தில், இவ்விருதினைப் பெற 10 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவைகளிலிருந்து,பசுமை முதன்மையாளர் விருதிற்கு 3 நபர்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விருது தேர்வுக்குழு கூட்டம் 13.05.2024 அன்று நடைபெற்று, 3 நபர்களை தேர்வு செய்துதமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News