25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (10.05.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்திற்கு வண்ணம் அடிக்கப்பட்டு வருவதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின்  கீழ், ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தை பழுதுபார்த்து, வண்ண பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்,
காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் கட்டப்பட்டுள்ளதையும்,கோட்டையூர் ஊராட்சியில், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையத்தில் பூச்சு வேலை நடைபெற்று வருவதையும்,தம்பிப்பட்டி ஊராட்சியில், அரசு பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைபடுத்துதல் திட்டத்தின் கீழ், ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் தம்பிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் கிழக்கு பக்கம் உள்ள வடக்கு பார்த்த பள்ளி கட்டடத்தில் பூச்சு நடைபெற்று வருவதையும்,பின்னர், மகாராஜபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதையும்,இராமசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும்,ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.46 இலட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் பூச்சு நடைபெற்று வருவதையும்,

குன்னூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில், நியாயவிலை கட்டடத்திற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News