அர்ஜுன், ஹரிகிருஷ்ணா உலக கோப்பை செஸ் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன்கோவாவில், மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, 3 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்றனர். நேற்று டை பிரேக்கர்' போட்டி நடந்தன.
முதல் போட்டியில் அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதி ,அர்ஜுன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியின் முடிவில் 3.0-1.0 என வெற்றி பெற்று, ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மற்றொரு போட்டியில் சுவீடனின் கிரான் டெலியஸ் இடையிலானமுதல் 'டை பிரேக்கர்' போட்டி 'டிரா ஆனது. அடுத்த போட்டியில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, 34வது நகர்த்தலில் வெற்றி பெற்று.முடிவில் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று, ஐந்தாவதுசுற்றுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply