ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மூன்றுதங்கம் வென்ற முதல் வீராங்கனை ,என பெருமை பெற்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா!
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ,வங்கதேசத்தின் தாகாவில் தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டி நடந்தன. இதன் அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, 149-143 என தென் கொரியாவின் சி யு செனை வீழ்த்தினார்.பைனலில் ஜோதி, சக வீராங்கனை பிரித்திகா மோதினர். இதில் ஜோதி 147-145 என வென்று, தங்கம் கைப்பற்றினார்.கடந்த 2015, 2021, தற்போது 2025 என ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை என பெருமை பெற்றார் ஜோதி.
இந்தியாவின் தீப்ஷிஹா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 236-234 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது.
காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை எதிர் கொண்டது.இதில் இந்தியா 153-151 என வென்று, தங்கம் கைப்பற்றியது.
பிரிவில் இந்தியாவின் அபி ஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி, ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பைனலில் 229-230 என கஜகஸ்தானிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply