டில்லியில்ஜூனியர்பெண்களுக்கானஐ.டி.எப்., டென்னிஸ்தொடர்நடக்கிறது.ஒற்றையர்பிரிவில்இந்தியாவின் கோவையை சேர்ந்த 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். நேற்று நடந்த காலிறுதியில், இத்தொடரின் ‘நம்பர்-7' வீராங்கனை ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவாவை சந்தித்தார். முதல் செட்டை 6-3 என வென்றார் ரேவதி. அடுத்த செட்டில் 1-0 என முன்னிலை பெற்றார். மறுபக்கம் ராடா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மாயா ரேவதி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
கத்தாரில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ்ஷா ஜோடி, ஹாங்காங் கின் குவான் மான், லாங் சியு ஜோடியை எதிர் கொண்டது. இதில் இந்திய 4 3-0 (11-5, 11-3, 11-6) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
ஒடிசா மாநிலம் ரூர்கே லாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டி யில்தமிழகம், கோனாசிகா அணிகள் மோதின. விறு விறுப்பான இப்போட்டி யில் தமிழக அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி உட்பட 9 புள்ளிகளுடன் தமிழக அணி 2வது இடத் துக்கு முன்னேறியது..
மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர். பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான பிரச்னை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. பிரனாய் இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது, கடைசி செட்டை பிரனாய் 21-15 என வசப்படுத்தி னார். முடிவில் பிரனாய் 21-12, 17-21, 21-16 என போராடி வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ‘யூத்' ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன், இந்தியாவின் மாளவிகா, 2 முறை ஜூனியர் உலக சாம்பியன் ஆன, மலேசியாவின் ஜின் வெய் மோதினர். இதில் மாளவிகா, 21–15, 21–16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
குஜராத் மாநிலம் வதோதராவில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது.யூத் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி, ஹரியானாவின்' சுஹானா சைனி மோதினர். ஹன்சினி 4-2 (1-11, 11-9, 13-11, 11-9, 10-12, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இளம் வயதில் (15) 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைஆனார். டென்னிஸ்: காலிறுதியில் மாயா ரேவதி .ஒற்றையர் பிரிவு இந்தி யாவின் 15 வயது வீராங் கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரான்சின் மனான் பேப்ளரை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-0 என வென்றார் ரேவதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர் 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரேவதி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
தமிழகத்தின் காஞ்சி புரத்தை சேர்ந்தவர்,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 22. பிறக்கும் போது தசைநார் சிதைவு காரணமாக இட துகை பாதிக்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளியான தந்தை முருகேசன், மகள் துளசிமதியை விளையாட்டு அரங்கில் களமிறக்கினார்.பாட்மின்டனில் கால் பதித்தார் துளசிமதி. 15 நாடுகளில் நடந்த தொட ரில் 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துளசிமதி "சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.டில்லியில் இந்திய ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் (ஜன.14-19) நடக்க உள்ளது. இதில் சிந்து, லக்சயா சென், சிராக்-சாத்விக் உட்பட 21 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந் தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா பயிற்சி அகாடமியில் சேர்ந்துள்ளார்.நேற்று தனது முதல் சுற்றில் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற துருக்கியின் அடாகும்ருவை சந்தித்தார்.. முடி வில் மாயா ரேவதி, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக் கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
கேப்டன் ஹர்மன் பிரீத் கவுருக்கு 35, ஓய்வு தரப்பட்டது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 28, கேப்டனாக தேர்வு செய் யப்பட்டுள்ளார். வேகப் பந்து வீச்சாளர் ரேணுகாவுக்கும் ஓய்வுதரப்பட்டது.
மும்பையில் லக்சயா கோப்பை ,இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் 251.7 புள்ளிகளுடன் இந்திய கடற்படை அணி வீரர் கிரண் ஜாதவ் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ரயில்வேஸ் அணியின் அர்ஜுன் பாபுதா 208.2 புள்ளிகளுடன் 4 வது இடம் பிடித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் சர்வதேச பிரிட்டிஷ் ஸ்குவாஷ் தொடரில், ஜூனியர் பெண்கள் பிரிவில் (17 வயதுக்குட்பட்ட) இந்தியாவின் அனாஹத் சிங் களமிறங்கினார்.இத்தொடரின் 'நம்பர் -1' அந்தஸ்து பெற்ற இவர், பைனலுக்கு முன்னேறினார். இதில் எகிப்தின் மலிகா எல்கராஸ்கியை சந்தித்து, 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அனாஹத், 3-2 என்ற செட் கணக்கில், சாம்பியன் ஆக வெற்றி.