பீஹாரின் பாட்னாவில் தேசிய யூத் தடகளசாம்பியன்ஷிப் 20வதுசீசன், நடக்கிறது.இரண்டாவதுநாளானநேற்று, ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் நிவேத், 14.35 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஜார்கண்ட்டின் சாஜித் (14.421), கேரளாவின் பஜலுல் ஹக் (14.429) வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் எட்வினா (55.86 வினாடி) தங்கம் கைப்பற்றினார்.
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ரோகித் சர்மா 37, ஒருநாள் அரங்கில் இருந்தும் விடை பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது.ரோகித் கூறுகையில்," எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. ஒருநாள் போட்டியில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது," என்றார். கோலி கூறுகையில்,. இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடைந்த ஏமாற்றத்துக்குப் பின், தற்போது பெரிய தொடரில் சாதித்துள்ளோம்,'' என்றார். நான்காவது இடத்தில் களமிரங்கிய ஸ்ரேயாஸ் இத்தொடரில் அதிக ரன் (243) எடுத்த இந்திய வீரரானார். கேப்டன் ரோகித் கூறுகை யில், "போட்டியின் 'மிடில்' சூழலில், சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ். சக வீரர்களுடன் இணைந்து 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்று 'சைலண்ட் ஹீரோ' ஸ்ரேயாஸ்," என்றார். ஐ.சி.சி.,அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல்கோப்பை வென்ற 2வது இந்திய கேப்டன் ஆனார் ரோகித். இவரது தலைமையிலான இந்திய அணி, 'டி-20' உலக கோப்பை (2024), சாம்பியன்ஸ், டிராபி (2025) வென்றது. தோனி வழி நடத்திய இந்திய அணி 2007ல் 14-20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 முறை சாம்பியன் ஆனது கடந்த 2024ல் 'டி - 20' உலக கோப்பை வென்ற போது, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து, பிரபோர்ன் மைதானம் வரை திறந்தவெளி பஸ்சில் வெற்றி ஊர்வலம் சென்றனர். இம்முறை பிரபோர்ன் மைதானத்தில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தவிர மார்ச் 22ல் ஐ.பி.எல்., தொடர் துவங்க உள்ளது. இதனால் துபாயில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்புகின்றனர். வெற்றி பவனி இருக்காது எனத் தெரிகிறது. பாகிஸ்தான், துபாயில், சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது. இதில் சிறப் பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, 12 பேர் கொண்ட அணியை ஐ.சி.சி., வெளியிட்டது. இந்த அணியில் இந்தியா சார்பில் அதிக பட்சமாக 6 பேர் இடம் பெற்றனர். கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஷமி, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தேர் வாகினர். விக்கெட் கீப்பருக்கான இடத்தை ராகுல் பிடித்தார். பைனலில், ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடம்கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கைகொடுத்த 9 டிராபி விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி.
மும்பையில், சி.சி.ஐ., ஸ்னூக்கர் கிளாசிக் தொடர் நடந்தது. இதன் பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, இஷ்பிரீத் சிங் சதா மோதினர்.துவக்கத்தில் 2-6 என பின்தங்கிய அத்வானி, பின் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 6 'பிரேம்'களை கைப்பற்றினார்.முடிவில் அத்வானி 8-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.28 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) கோப்பை வென்றார். 'நடப்பு தேசிய, ஆசிய சாம்பியன்' அத்வானிக்கு, கோப்பையுடன் ரூ. 3.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்தது.தமிழகத்தில் இருந்து 440 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) மயில் வாகனன் (போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,), சுரேஷ், ராஜேஷ், மோகன்குமார் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் கைப் பற்றியது.பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) அருள்மொழி சுகன்யா ரவிச்சந்திரன், ஸ்ரீலேகா, பிந்து கணேஷ் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் வென்றது.35 வயதுக்கு மேற் பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் ஜேசு எஸ்தர் ராணி, 4x400 மீ., தொடர் ஓட்டம், 4X100 ., தொடர் ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றார். தவிர 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெண்கலம் கைப்பற்றினார்.
, பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர், டில்லி நேரு விளையாட்டு அரங்கில், இந்தியாவில் முதல் முறையாக இன்று துவங்குகிறது. மூன்று நாள் நடக்கும் தொடரில், பாரா வீல் சேர் ரேசிங், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த 283 பாரா வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்னர். இந்தியா சார்பில் 167 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.தமிழகம் சார்பில் ரமேஷ், கீர்த்திகா உட்பட 12 பேர் கலந்து கொள் கின்றனர். இவர்களுக்கு தலா 65,000 ரூபாய் வீதம், 10.40 லட்சம் ரூபாய் நிதி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி வழங்கி உள்ளது.
நேற்று நடந்த பைனலில், உல கின் 'நம்பர்-1' அணியான இந் தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து *வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. ஐ.சி.சி., அரங்கில், இந்திய அணி 7வது முறை கோப்பை வென்றது. நேற்று 3வது முறையாக (2002, 2013,2025) சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியா, தலா 2 உலக கோப்பை (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007, 2024) கைப்பற்றியதுஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதுவரை 3 முறை (2002, 2013, 2025) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2006, 2009) உள்ளது. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), இலங்கை (2002), வெஸ்ட் இண்டீஸ் (2004), பாகிஸ்தான் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன. இதில் 2002ல் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வென்ற இந்தியா அணிக்கு கோப்பையுடன், ரூ. 19.49 கோடி சன், பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த நியூசி லாந்து அணி ரூ. 9.74 கோடி பரிசு பெற்றது. பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 10வது சீசன், வரும் 2029ல் இந்தியாவில் நடக்க உள்ளது.
நேற்று, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன், சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இது, நடப்பு சீசனில் சென்னை அணி பங்கேற்ற கடைசி போட்டி. ஆடிய சென்னை அணி5-2 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. சென்னை அணி சார் பில் டேனியல் சிமா (25, 90+6வது நிமிடம்), இர்பான் யாத்வாட் (57, 90வது) தலா 2, லுாகாஸ் பிரம்பில்லா (45 + 3வது) ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணிக்கு ரீ டச்சிகாவா (18வது நிமிடம்), முகமது சனான் (62வது ) தலா ஒரு கோல் அடித்தனர்.சென்னை அணி 24 போட்டியில், 7 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.
டில்லியில், வரும் மார்ச் 11,13ல்மாற்றுத்திறனாளி களுக்கான உலக'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் தொடர்,. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும்,இத்தொடரில்,20 நாடுகளை சேர்ந்த,250க்கும் மேற்பட்ட 'பாரா'விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உயரம் தாண்டு தல், 'டி64'), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல், ‘எப்41'), தரம்பிர் ('கிளப் த்ரோ', 'எப்51') உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தரம்பிர் கூறுகையில், சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,” ,"சொந்த மண்ணில் உலக 'பாரா' தடகளம் நடக்க இருப்பது இந்திய நட்சத்திரங்களுக்கு,. நீண்ட நாள் கனவுநிறைவேறியது..
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டென்மார்க் கின்ராஸ்மஸ் கெம்கே மோதினர். முதல் செட்டை 21,16 எனக் கைப்பற்றிய ஆயுஷ், இரண்டாவது செட்டை 21-23 என போராடி இழந்தார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்டஆயுஷ் 21-17 என வென்றார்.ஒரு மணி நேரம். 21 நிமிடம் நீடித்த காலிறுதியில் அசத்திய ஆயுஷ் 21,16,/21,23/,21,17 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
சர்வதேசசெஸ்கூட்டமைப்பு(பிடே)சார்பில்20வயதுக்குட்பட்டோருக்கான உலகஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்,மான்டினிகிரோ வில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயதுபிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார். பிரனவ். போட்டியின் 18வதுநகர்த்தலில் 'டிரா'செய்தார். இதையடுத்து 11சுற்றில் 7 வெற்றி,4'டிரா'செய்த பிரனவ்,9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். உலக ஜூனியர் செஸ்சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த்(1987),ஹரிகிருஷ்ணா(2004),அபிஜீத் குப்தா(2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.