10வது 'T-20' உலக கோப்பை ஆமதாபாத்தில் நடந்த பைனலில் நியூசிலாந்தை, இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பைகைப்பற்றிய முதல் அணி, தொடர்ந்து 2 கோப்பை (2024, 2026), மூன்று சாதனைகள் படைத்தது. டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ .131 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 51 கோடி தான் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் அணியுடன் ஒப்பிடுகையில் ரூ.80 கோடி குறைவு. பி.சி.சி.ஐ., பார பட்சம் காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் ஆஸ்திரேலியாவில், இன்றுநடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட் டியில் வியட்நாம், ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்,இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, நியமிக் கப்பட்டார். பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத்தில்,இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர், சுனேலிதா தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டி 2-2 என, 'டிரா' ஆனது. இந்திய வீராங்கனை சிந்து , சுவிட்சர்லாந்தில் இன்று துவங்கும் சுவிஸ் ஓபன் பாட் மின்டன் தொடரில் இருந்து விலகினார். ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில்டில்லியில் பஞ்சாப், வட கிழக்கு யுனைடெட் அணிகள் மோதி,1-1 என 'டிரா' ஆனது.
ஆண்களுக்கான ஏ.டி.பி., பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில், இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ,இந்தியாவின் யூகி பாம்ப்ரி,சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி, பிரான்சின் பேப் ரைஸ் மார்டின், நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சந்தித்தது. இந்தியா , சுவீடன் ஜோடி, முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றி,, 2வது செட்டை 6-3 என வென்றது. பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது.
நியூசவுத் வேல்ஸ் ஸ்டேட் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்ஆண்களுக்கான 200 மீ 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் இந்தியாவின் ரிஷாப் தாஸ், தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்றிருந்தார். நேற்று, 100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு போட்டி நடந்தது. ரிஷாப் தாஸ் மீண்டும். 55.51 வினாடி நேரத்தில் கடந்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் வென்றார்.
டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், 3வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-4, 6-1 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வென்றார்..அமெரிக்காவின் கோகோ காப் (2-6,0-2) பாதியில் விலக, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றார்..
இந்தியா, நியூசிலாந்து அணிகள்ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பைனலில் மோதின. நியூசிலாந்து அணியில் மெக்கோன்கிக்கு பதிலாக ஜேக்கப் டபி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்,பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'நடப்பு சாம்பியனாக' கள மிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை வென்றது.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் கர்நாடகாவின் கலபுராகி நகரில் ,ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி ('நம்பர்-468'), அன்கிதா ரெய்னா ('நம்பர் -681) ,முதல்செட்டில் இருவரும், 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல்செட்டை 7-6 என கைப்பற்றினார்.இரண்டாவது செட்டிலும் 4-4 என நீடித்தது. வைஷ்ணவி அடுத்த இரு 'கேம்களை' கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். ஆட்ட முடிவில்வைஷ்ணவி 7-6,6-4 என்றநேர்செட்டில் வெற்றிபெற்றுசாம்பியன்ஆனார்.வைஷ்ணவிக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட் மின்டன் தொடர் பர்மிங்காமில்ஆண்கள் ஒற்றையர்பிரிவு பைனலில், உலகின் 'நம்பர் -12' இந்தியாவின் லக்சயா சென், 'நம்பர்-2' வீரரான சுன்-யிலின் மோதினர். லக்சயா சென் 15-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
நடப்பு ஆண்டின் முதல் 'கிராண்ட் பிரிக்ஸ்’ பார்முலா 1 கார்பந்தயம்,ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்,'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ்ரசல், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம்,23 நிமிடம்,06.801 வினாடியில் கடந்து 'சாம்பியன்' பட்டத்தை வென்றார்.'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 2வது இடம் பிடித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வதுசீசன்நேற்றுஇத்தாலியின்மிலன், கார்டினாநகரில்,முதன்முறையாக 56 நாடுகளை சேர்ந்த 616 பேர் பங்கேற் கின்றனர். இதற்கு முன், 2018ல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த 564 பேர் பங்கேற்றது அதிகம். ஐஸ் ஹாக்கி, ஸ்னோபோர்டு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில், 79 பதக்கப் போட்டிகள் நடக்கவுள்ளன.ஒருவர் கூட இந்தியா சார்பில் தகுதி பெறவில்லை. இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை..