25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்  செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி(எம்.ரெட்டியபட்டி) ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய வட்டாரங்களான திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்(12.08.2025) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பின்தங்கிய வட்டாரங்கள் இனம் காணப்பட்டு அந்த வட்டாரங்களின் வளர்ச்சிக்காக வளர்ச்சி திட்;டத்தை உருவாக்கி, அதற்கான மூன்று ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கப்பட்டு, அந்த செயல் திட்டத்தை மூன்று நிதி ஆண்டுக்கான அறிக்கையாக மாற்றி, அதன்பிறகு திட்டப்பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடல்நலம் மற்றும் ஊட்டசத்து, சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைகள் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 131 வளர்ச்சி குறியீடுகளை  (Key Developmental Indicators) (KDI’s)  அடிப்படையாக கொண்டு வட்டார அளவிலான திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,  வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,  2025 ஆம் ஆண்டிற்கான வட்டார ஆண்டுத்திட்டம் தயாரிக்கும் பொருட்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், மாவட்ட திட்ட அலுவலர் திரு.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News