தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன்
19 வயதுக்குட்பட் டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
பி பிரிவில்இடம் பெற்றுள்ள இந்தியா, நேபாளஅணிகள் நேற்று மோதின. போட்டியின் 28 வது நிமிடத்தில் நேபாள வீரர் தலையில் பட்டு வந்த பந்தை லாவகமாக கொண்டு சென்று, கோலாக மாற்றினார் இந்தியாவின் ரோஹன் சிங்.
இம்முறை சக வீரர் டேனி மெய்டெய் அடித்த பந்தை பெற்ற ஓமங் டோடம், கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ரோஹன் சிங்(75வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மாலத்தீவு அணியை (மே 16) சந்திக்க உள்ளது.
0
Leave a Reply