கிளாசிக் செஸ் தொடர்.
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.
முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் சக வீரர் பிரனவ் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் போட்டியை டிரா' செய்தார். அடுத்து நடந்த 5வது சுற்றில் பிரக்ஞானந்தா ஹங்கேரியின் தாமஸ் ஜூனியர் போடோரை சந்தித்தார். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் ,45வது நகர்த்தலில் ரஷ்யாவின் டேனியல் யூபாவை வென்றார். இந்தியாவின் இனியன் 49வது நகர்த்தலில் இங்கிலாந்தின் ஜோனா பி வில்லோவை வென்றார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரனவ் ஆனந்த், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.பிரக்ஞானந்தா, இனியன் உள்ளிட்டோர் தல 4.0 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
0
Leave a Reply