25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Oct 30, 2025

இந்தியாவின் யாஷிதா ஆசிய யூத் விளையாட்டு மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.

பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான 61  கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில்  யாஷிதா 17, பங்கேற்றார். அரையிறுதியில் கிர்கிஸ்தானின் அகிலய்யை, 6-0 என வென்றார்.பைனலில் யாஷிதா, கஜகஸ்தானின் ஜைதரை சந்தித்தார். முதல் பீரிய டில் (3 நிமிடம்), யாஷிதா 0-1 என பின் தங்கினார். இரண்டாவது " பீரியடில் யாஷிதா 5-4 என ,முடிவில் ஸ்கோர் 5-5 என ஆனது. கடைசி புள்ளி எடுத்த அடிப்படையில் யாஷிதா வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு யூத் ஆசிய மல் யுத்தத்தில் முதல் தங்கம் வென்று தந்தார்.இதுவரை இந்தியா 4 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம், என மொத்தம் 26 பதக்கம் வென்று, பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

Oct 30, 2025

இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சஹாஜா ,சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ்தொடர் சென்னையில், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின்ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ,ராஷ்மிகா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சஹாஜா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 1-6, 2-6 என  குரோஷியாவின் டோனா வெகிக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, கிம் பர்லி பிர்ரெல், ஸ்டிரோம் ஹன்டர், சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட், பிரான்சின் டயான் பாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Oct 30, 2025

இந்தியாவின் ரோகித் சர்மா ஐ.சி.சி ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.

 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட் டியலை , துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன் முறையாக  'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் (121*) விளாசினார் .இதன்மூலம் ஐ.சி. சி., தரவரிசை பட்டியலில் அதிக வயதில் (38 ஆண்டு, 182 நாள்) 'நம் பர்-1' இடம் பிடித்த வீரரானார். 

Oct 29, 2025

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டி 'டிரா’ ஆனது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் பெங்களூருவில் நடந்த போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்ல் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 365/5 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்டூர் (115) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று நடந்தநான்காவது, கடைசி நாள் ஆட்டத்தில்ஆறாவது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஸ் பந்தில் நிஸ்சால் (175) அவுட்டாக, ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. கடைசியில் லெம்டுர் (146) அவுட்டாக, நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 446 ரன்னில் ஆல் அவுட்டானது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படை யில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. நாகலாந்துக்கு 1 புள்ளி கிடைத்தது.

Oct 29, 2025

கிளட்ச் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் முதலிடத்தில் உள்ளார்.

கிளட்ச் செஸ் தொடர் ,கிராண்ட் செஸ் டூர் தொடரின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து, நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் இத்தொடர் நடக்கிறது.உலகின் முன்னணி வீரர்கள் உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ காரு வானா, ஹிகாரு நகமுரா என நான்கு பேர் மட்டும் பங்கேற்கின்றனர். முதல் நாளில் மூன்று சுற்று போட்டி நடந்தன. ஒவ் வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோதினர்.முதலில் குகேஷ்- கார்ல்சன் மோதிய போட்டியில்தோற்ற குகேஷ், அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். பின் குகேஷ், நகமுராவை சந்தித்தார். முதல் போட்டியில் குகேஷ், 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 2வது  போட்டி டிரா ஆனது. அடுத்து குகேஷ்-பேபி யானோவை சந்தித்தார். இதன் இரு போட்டியி லும் குகேஷ் வெற்றி பெற்றார். முதல் நாள் முடிவில் குகேஷ், 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.

Oct 29, 2025

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி., ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1'

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் முதன் முறையாக 828 புள்ளி பெற்று, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, முதலிடத்தில் நீடிக்கிறார்.உலககோப்பை தொடரில் 29 வயதான இவர், நியூசிலாந்துக்கு எதிராக 109, வங்கதேசத்திற்கு எதிராக 34 ரன் எடுத்ததை அடுத்து, இந்த முன்னேற்றம்கிடைத்தது.இரண்டாவது இடத்தில் சுமார் 100 புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனெர் (731) உள்ளார். இவர் 6 இடம் முன்னேறினார். 2 இடம் முந்திய தென் ஆப்ரிக்க அணி கேப்டன் லாரா (716) 3வது இடம் பிடித்தார். நாட் சிவர் பிரன்ட் (711), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (709) 4, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (603), 8 இடம் முன்னேறிய ஜெமிமா (596) 18, 19வதாக உள்ளனர். பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (655), இரண்டு இடம் பின்தங்கி, 5வது இடம் பெற்றார். இங்கிலாந்தின் சோபி எக் லெஸ்டோன் (747) முதலிடத்தில் நீடிக்கிறார்.

Oct 29, 2025

பாரா 'கிளைம்பிங்' உலக கோப்பை தொடரில் மணிகண்டன் குமார் 'தங்கம் வென்றார்.

பாரா 'கிளைம்பிங்' உலக கோப்பை தொடர் பிரான்சின் லாவல் நகரில் மொத்தம் 18 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். சமீபத்தில் தென் கொரியாவில்   நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். இம்முறை ‘ஆர். பி.2' பிரிவில் களமிறங்கினார் .மணிகண்டன் 44+ புள்ளி எடுத்து, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். உலககோப்பை தொடரில் மணிகண்டன் வென்ற முதல் தங்கம் இது. ஜெர்மனியின் பிலிப் குரோஜக் (44), ஆஸ்திரியாவின் டெனியல் வியனெர் (40) அடுத்த இரு இடம் பிடித்தனர்.ஐந்து தங்கம், 2 வெண்கலம் வென்ற பிரான்ஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன், 5 வயதில், வலது காலில் ஏற்பட்ட 'போலியோ' பாதிப்பில் இருந்து மீண்டார். 16 வய தில் வேகமாகசுவற்றில்ஏறும், சாகசபோட்டிகளில்('கிளைம்பிங்') பங்கேற்றார்.முதன்முறையாகஉலககோப்பைதொடரில் சாதித்துள்ள இவர் ,உலக சாம்பியன்ஷிப்பில் ஆறு பதக்கம் வென்றுள்ளார்.

Oct 28, 2025

ஆசிய ரக்பி தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில்,  லீக் சுற்றில் லெபனான் (14-10), ஆப்கானிஸ் தானை (26-5) வீழ்த்திய இந்தியாமுதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் ஈரானை (21-7) வென்றஇந்தியா, அரையிறுதியில் 17-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. பைனலில் இந்தியா ,கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.இதன்மூலம் இந்தியாஆசிய  ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடர்களில் விளையாட தகுதி பெற்றது .

Oct 28, 2025

ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பளுதுாக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மகாராஜன் ஆறுமுகபாண்டியன்.

ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன்  பஹ்ரைனின் மனாமாநகரில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 1 16, பங்கேற்றார்.'ஸ்னாட்ச்' பிரிவில் 114, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 142 என, ஒட்டுமொத்தமாக 256 கிலோ பளுதுாக்கிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.இவர், 'ஸ்னாட்ச்' பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.எட் வினா ஜான்சன், தன்னு, ஷவுர்யா, பூமிகா அடங்கிய இந்திய அணி, பெண்களுக்கானமெட்லே' தொடர் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 2 நிமிடம், 09.65 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்திய அணி ஆண்களுக்கான 'மெட்லே' தொடர் ஓட்டத்தில் (ஒருநிமிடம், 59.96 வினாடி) 5வது இடம் பிடித்தது.இதுவரை 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம், என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

Oct 28, 2025

இந்திய வீராங்கனை சிந்து காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பாட்மின்டன் போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை  சிந்து ,ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண் கலம்), உலக சாம்பியன் ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் காலிறுதி வரை சென்ற இவர், ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. கடைசியாக, கடந்த டிசம்பரில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார்.காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள  சிந்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள மீத முள்ள பி.டபிள்யு.எப்., டூர் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். சிந்து கூறுகையில், "காயம் முழுமையாக குணமடையாததால், நடப்பு சீசனில் இருந்துபாதியில் விலக நேரிட்டது. எனது பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினருடன்ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளேன்.காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட் டேன். முழு உடற்தகுதியுடன் புதிய சீசனில் கள மிறங்குவேன்," என்றார்.

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 158 159

AD's



More News