25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


டெஸ்ட் அணி கேப்டனாக சுப்மன் கில்  தேர்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெஸ்ட் அணி கேப்டனாக சுப்மன் கில்  தேர்வு

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது.இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.தற்போது, இந்திய அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் நாங்கள் களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். 

மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணி யில் தங்களது இடம் பாதுகாப்பான என் பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம்.

அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.கேப்டனாக, மற்ற வீரர் களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என்று சுப்மன் கில் கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News