சர்வதேசசெஸ்கூட்டமைப்பு(பிடே)சார்பில்20வயதுக்குட்பட்டோருக்கான உலகஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்,மான்டினிகிரோ வில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயதுபிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார். பிரனவ். போட்டியின் 18வதுநகர்த்தலில் 'டிரா'செய்தார். இதையடுத்து 11சுற்றில் 7 வெற்றி,4'டிரா'செய்த பிரனவ்,9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். உலக ஜூனியர் செஸ்சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த்(1987),ஹரிகிருஷ்ணா(2004),அபிஜீத் குப்தா(2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.
பிராகு மாஸ்டர்ஸ் செஸ்தொடரில்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரிஉள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன்9வதுசுற்றில்தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர்.. இப்போட்டி 39வது நகர்த்தலின் போது'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி,6 'டிரா' என6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
துபாயில் வரும் மார்ச் 9 நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, சான்டனர் வழிநடத்தும் நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது.இதுபற்றி நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறுகையில், 'துபாயில் மட்டும் விளையாடுவதால், இங்கு எப்படி செயல்பட வேண்டுமென இந்தியாவுக்கு தெளிவாக தெரியும். தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. பைனலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என்றார்.
குத்துச்சண்டைகிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,)மார்ச் 21-27ல் தேசிய சாம்பியன்ஷிப் , 'நடப்பு சாம்பியன்' ரயில்வேஸ் உட்பட 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். செஸ் செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.இதன் 7வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, சீனாவின் யி வெய் மோதி, 61வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். அரவிந்த், 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு சுற்றுகளின் முடிவில் தமிழகத்தின் அரவிந்த், 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். பாட்மின்டன் பிரான்சில் சர்வதேச பாட்மின்டன் தொடர் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 19 இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (48வது இடம்), முன்னாள் உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-12' ஆக உள்ள, சிங்கப்பூரின் லோகியான் இயுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய ஆயுஷ், அடுத்த செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஆயுஷ் 21-17, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, 21–17, 21-17 என ஹாங்காங்கின் குனவானை வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். டென்னிஸ்செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மரியா கார்லியை அமெரிக்காவில் நடக்கும் இந்தியன் வெல்ஸ் ஓபன் முதல்சுற்றில் வீழ்த்தினார். கிரிக்கெட்இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள்இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஏப். 27- மே 11, இடம்: கொழும்பு) பங்கேற்கின்றன.
தேசிய மாஸ்டர்ஸ் தட கள சாம்பியன்ஷிப் தொட ரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணை யத்தின் நேதாயத்தின் நேதாஜி சுபாஷ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல் படுபவர்கள், இந்தோனே ஷியாவில் நடக்கவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த சில ஆண்டு களாக தமிழக அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழக அணியினர் வெள்ளி வென்றனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் பாலசுப்ரமணியன், ரகுநாத், கணேசன், ஜெயச்சந்திர பாண்டி.
மும்பையில், சி.சி.ஐ.. ஸ்னுாக்கர் கிளாசிக்தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் (ரவுண்ட் 32) பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, தெலுங்கானா வின் ஹிமான்ஷு ஜெயின் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' பங்கஜ் அத்வானி 4-1 (43-77, 72-35, 80-33, 80-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று நடந்தஇரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொண்டது. நியூசிலாந்து அணி 50 ஓவரில்362/6 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 312/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல், மார்ச் 9ல் துபாயில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி, ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன.நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துவக்கத்தில் திணறிய இந்திய அணி சுப்மன் கில் (8) ஏமாற் றினார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் ரோகித் சர்மா (28), கொனாலி வலையில் சிக்கினார். இந்தியா 8 ஓவரில் 42/2 ரன் எடுத்தது. கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து , 'ரிஸ்க்' எடுக்காமல் அழகாக ரன் சேர்த்தனர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார்.கடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா28 ரன் எடுத்தார். மேக்ஸ் வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ) அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சினை (23) முந்தினார் கோலி. இவர் 24 அரைசதம் அடித்துள்ளார். ரோகித் (18) 3வது இடத்தில் உள்ளார்.நேற்று அரைசதம் விளாசிய கோலி, ஒருநாள் அரங்கில் 'சேஸ்' செய்யும் போது 8000 ரன் (159 இன்னிங்ஸ்) எட்டிய உலகின் 2வது வீரரானார். சராசரி 64.54 வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். முதலிடத்தில் சச்சின் (8,720 ரன், சராசரி 42.33, 232 இன்னிங்ஸ்)) உள்ளார்.ஒருநாள் அரங்கில் சேஸ் செய்த போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சச்சினுடன் (242 போட்டி, 69 அரைசதம்) இணைந்து முதலிடம் பிடித்தார் கோலி. ஒருநாள் அரங்கில் அதிக 'கேட்ச்' பிடித்த பீல்டர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் கோலி (161 கேட்ச், 301 போட்டி). நேற்று 2 கேட்ச் பிடித்த இவர், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (160, 375 போட்டி) முந்தினார். முதலிடத்தில் ஜெயவர்தனா (இலங்கை, 218, 448 போட்டி) உள்ளார்..ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் கோலி. சச்சின் (71), தோனிக்கு (55) அடுத்து இம்மைல் கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரரானார்.
இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் (6 புள்ளி) பிடித்தது.நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங் பலமாக உள்ளது.வங்கதேசத்திற்கு எதிராக கேப்டன் ரோகித் (41), சுப்மன் கில் (101) பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த கோலி சதம் அடித்தார். வேகப்பந்துவீச்சில் ஷமி, ஹர்ஷித் மிரட்டலாம். ராணா நியூசிலாந்துக்கு எதிராக நான்கு 'ஸ்பின்னர்'களுடன் இந்தியா களமிறங்கியது. இதில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்டார். துபாய் 5 சுழலுக்கு கை கொடுத்தஆடுகளம் , இன்றும் அதிக 'ஸ்பின்னர்'கள் இடம் பெறுவது உறுதி. ஒட்டுமொத்தமாக இந்திய அணி வலுவாக இருப்பதால், பைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு. இம்முறை இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்த 'ஸ்பின்னர்' களை நம்பி களம் இறங்குகிறது.