ஆப்பம் அதிக மென்மையாக இருக்க....
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக
இருக்கும்
அரிசியை காற்று புகாத பாத்திரங்களில் கொட்டி வைத்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம். இந்த பாத்திரங்களில்4 அல்லது5 வேப்பிலைகளுடன் சிறிது காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சிகள் வராது.
பூஞ்சைகள்உருவாவதையும் தடுக்கலாம்.
ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து,நெய்யில் வறுத்து சேர்த்து, 4 டீஸ்பூன் பால் பவுடரையும் கலந்து ,சுவையான ல ட்டு. உருவாக்கலாம்
துவையல் அரைக்கும்போது, மிளகாயை தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது.
துவரம்பருப்பை வேக வைக்கும்போது ,ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
0
Leave a Reply