முடி அடர்த்தியாக வளர ....
. மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இவற்றின் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை அடையலாம்.இவை, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவைப் பெறுகிறது .வளி மண்டல நிலையாலும், குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் நமக்கு தலை முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு நல்ல தீர்வை தருகிறது. இதற்கு மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசி வரவும். இதேபோல் வாரத்திற்கு, இரண்டு முறை செய்து வந்தால், முடி முன்பை விட அடர்த்தியாக வளரும்.
மரவள்ளிக் கிழங்கு எண்ணெய் இதனை ஆங்கிலத்தில் burdock root oil என்று அழைப்பர். இது அழகு சாதன கடைகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மிக முக்கியமான எண்ணையாகும்வாழைப்பழத்தில் தேவைப்படும் அதிக கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.பழுத்த வாழைப்பழம் - 1 மரவள்ளி கிழங்கு எண்ணெய் - 7 ஸ்பூன்,வாழைப்பழத்தை மசித்து அதனுடன் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஷவர் கேப்பினால் மூடிக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைமுடியை ரசாயனம் அல்லாத ஷாம்புவினால் அலசுங்கள்.
0
Leave a Reply