25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


‘Coffee With Collector” 156-வது கலந்துரையாடல்  நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘Coffee With Collector” 156-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (17.03.2025) நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) என்ற 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்துரையாடினார்.

பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள்; நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியால் போட்டித்தேர்வுக்கு பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பை பெற்று தரும் உயர்ந்த நோக்கத்திலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தனியாகவும், குழுவாக இணைந்து பயில்வதற்கும், அனைத்து நாட்களிலும் ஏழை எளிய மாணவர்கள் மிகுந்த காற்றோட்ட வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் படிப்பதற்கும், மாணவர்கள் மாலை நேரங்களில் மின் விளக்கு வசதியுடன் படிப்பதற்கும், எளிதாக பேருந்து வசதியுடன் இங்கு வந்து பயில்தற்கும் வசதியாக ரூ.50 இலட்சம் மதிப்பில் போட்டித்தேர்வு பயில்வோர் பூங்கா அமைக்கப்பட்டு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி, இன்று நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலின் போது, போட்டித்தேர்வுக்கு தங்களை தயார் செய்தது, அதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் அரசு வழங்கும் இலவச பயிற்சிகள், கையேடுகள், குறிப்புகள் ஆகியவற்றின் பயன்கள், மேலும் பயிற்சியை மேம்படுத்த தேவையான வசதிகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.மேலும், அரசுப் பணியில் சேரவிருக்கும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களையும், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *