25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக  டாக்டர். இராதா அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார்.  பள்ளி முதல்வர்  திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினரை  கெளரவம் செய்தார். நிகழ்ச்சிக்கு இராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதி சுமதி அவர்களும், ஆத்ம பிரசார உறுப்பினர் திரு. இராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.

டாக்டர்.இராதா அவர்கள் மாணவர்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் மாணவர்களுக்கு கற்றலின் மேன்மையை 'கற்க கசடற' என்ற திருக்குறளின் மூலம் மேற்கோள் காட்டினார். திருக்குறளில் அனைத்து வாழ்வியல் நெறிகளும்  அடங்கியுள்ளது என்று கூறினார். இன்றைய மாணவர்களின் மன அழுத்தத்திற்கான காரணம் அலைபேசியில் பேசுவதும், விளையாடுவதுமே.  இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தங்களுக்கு இடையே நேரடியான பகிர்தலையும், பழகுதலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.பின்பு நீதிபதி சுமதி அவர்கள் ஆற்றிய உரையில் தமது பள்ளி நாட்களை நினைவு கூறினார். அகரம் எல்லா எழுத்துக்களுக்கு எப்படி முதன்மையாக இருக்கிறதோ அது போல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து வாழ்வியல் நெறிகளுக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். திரு.இராஜேஷ் அவர்கள் தனது உரையில் நாடு எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அதற்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை  மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.  ஆசிரியை ஜெகதீஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.


 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News