34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்குட்பட்ட மக்களவைத் தொகுதியின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024- அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 27-ம் தேதி வரையிலும், மொத்தம் 41 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி அனைத்து வேட்பு மனுக்களும் 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் 28.03.2024-ம் தேதி காலை 11.00 மணி முதல் தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.
மேற்படி பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply