25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி ஆசிரியர் தினவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி ஆசிரியர் தினவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 05.09.23.ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.மதுமிதா அவர்கள் கலந்துகொண்டு  "சொல்புத்தி,சுயபுத்தி"நமக்கு அவசியம் என்பதை சிறப்பாக  எடுத்துக் கூறினார். *டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை மூன்றாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் ஆசிரியர்களின் பயணத்தைப் பற்றி நான்காம் வகுப்பு மாணவன் மாதேஷ் ஆகிய இருவரும் அருமையாக பேசினார்கள்.

ஆசிரியர்களை பாராட்டும் வண்ணம் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடல் ஒன்று பாடினார்கள்.

நான்காம் வகுப்பு மாணவன் பொற்கலைராஜன் தன்னம்பிக்கை தரக்கூடிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் வியக்க வைத்தான்.

நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதை குட்டிக்கதை மூலம் முதலாம் வகுப்பு மாணவி மதுமிகா கூறினாள்.

மேற்கத்திய நடனங்களை நினைவூட்டும் வண்ணம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் நடனம் ஒன்றும் ஆடினார்கள்.                                                                                                                                                                                                                                                                               கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.                             

நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெனிதா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News