கசப்பான உண்மை.
உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள்.
வீட்டிற்கு வந்த மருமகள் உயிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும்,தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள்.
வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.
கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில்'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சிங்க? என்று கேட்காமல் விட மாட்டார்கள்.
70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.
உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நபரும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை.
தோள் கொடுக்கும் உறவுகளை விட காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்!
0
Leave a Reply