25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபர்களாக மாறிய  சினிமா நட்சத்திரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபர்களாக மாறிய சினிமா நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள் சினிமாவை'தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம்பக் கால புகழ்பெற்ற ஹீரோக்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகை பானுமதி போன்றோர் சொந் தமாக ஸ்டூடியோக்கள் வைத்து இருந்தனர்.அதன் பிறகு வந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்தனர். நடிகைகள் அம்பிகா,ராதா ஸ்டூடியோ கட்டி வருமானம் பார்த்தனர். தற்போதைய முன் னணி கதாநாயகன் விஜய் திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் முதலீடு என்று இருக்கிறார்.

அஜித்குமார் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் சாலை பயணம்'மேற்கொள்பவர்களுக்காக ஏ.கே. மோடோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சூர்யா படக் கம்பெனி உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.

ஆர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஓட்டல் தொழில் செய்தார். இப்போது சினிமாவில் கிடைத்த வருமானம் மூலம் பல இடங்களில் உணவகம் திறந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத் தில் இருக்கும் நயன்தாரா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், துபாயில் எண் ணெய் நிறுவனம், படக்கம்பெனி, சர்வதேச சந்தையில் போட்டியிடக் கூடியளவுக்கு அழகு  சாதனப் பொருட்கள் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தமன்னா இணையதளம் மூலம் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். 

சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத் திலேயே விஜய், சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்த கீர்த்தி சுரேஷ் சம்பாத்தியத்தை முதலீடாக்கி அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார்.

தமிழில் அறிமுகமாகி இந்தியில் கொடிகட்டி பறக்கும் டாப்சி ஈவண்ட் மேனஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

‘மைனா' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அமலா பால் தன் சொந்த மாநிலமான கேரளாவில் யோகா மையங்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனம் என பல வியாபாரம் செய்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழி களிலும் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஆந்திரா மாநிலத்தில் பல இடங் களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தன் தங்கையுடன் சேர்ந்து தங்க நகை வியாபாரம் செய்கிறார்.

தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, அனுஷ்கா, சமந்தா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News