மீன் குழம்பு மணமாகவும், ருசியாகவும் இருக்க
மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன் இரண்டு சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
மீன் குழம்பு செய்யும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து, கால் டீஸ்பூன் போட்டு இறக்கினால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.
மீனை எடுத்து அதன் கண்களை பார்க்க வேண்டும். மீன்களின் கண்கள் சற்று பிரகாசமாக இருந்தால் அது புதிய மீன். அப்படி இல்லாமல் அந்த மீனின் கண்ணில் வெள்ளை நிற அடுக்கு ஒன்று இருக்கும் இப்படி இருந்தால் இது பிடித்து வந்து பல நாள் ஆன மீன் என்பதை புரிந்து பார்த்து வாங்க வேண்டும்.
0
Leave a Reply