அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட படிவம்-12D வழங்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு, செவல்பட்டி ஆகிய இடங்களில் வசிக்கும் 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (25.03.2024) நேரில் சென்று, வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட படிவம்-12னு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்து உறுதி செய்தார்.மேலும், அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய 95 வயது மூத்த வாக்காளர்களை சால்வை அணிவித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கௌரவப்படுத்தினார்.இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே 12D படிவம் பெற்று தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தவறாமல் வாக்களித்து மற்ற வாக்காளர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply