25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் தகுதிப் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்('கேண் டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.நேற்று தலா இரு போட்டி கொண்ட அரையிறுதி சுற்று துவங்கின. 

முதல் உலகத் போட்டியில் தரவரிசையில்'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி,'நம்பர்-3' வீராங்கனை சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர்.17 வது நகர்த்தலில் சற்று பின்தங்கிய ஹம்பி, பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.38 வது நகர்த்தலில் இப் போட்டி‘டிரா’ஆனது. இருவரும் 0.5-0.5 என சம புள்ளியில் உள்ளனர்.

மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில்18வது இடத்திலுள்ள,19 வயது வீராங்கனை திவ்யா,'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா.இப்போட்டி30வது நகர்த்தலில்'டிரா' ஆக, இருவரும்0.5,0.5 என சம புள்ளி பெற்றனர்.இன்று அரையிறுதி இரண்டாவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் பைனலுக்கு செல்லலாம். மாறாக, மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News