25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரோஷினி நாடார் வெளியிட்ட HCL லாபம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோஷினி நாடார் வெளியிட்ட HCL லாபம்

இந்தியாவின் முன்னணி. டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் 5வது நிறுவனமாக மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது ஹெச்சிஎல்.


ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் ரூ.3,981 கோடியாக இருந்த லாபத்தை பதிவு செய்த நிலையில், இக்காலாண்டில் 0.35% அதிகரித்து, ரூ.3,995 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் சந்தை கணிப்புகள் ரூ.4,080 கோடியாக இருந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது ஹெச்சிஎல். வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் பார்க்கும் போது, டிசம்பர் காலாண்டை ஒப்பிடும்போது மார்ச் காலாண்டில் லாபம் 8% குறைந்துள்ளது.

மார்ச் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.28,499 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.27,059 கோடி அளவீட்டை விடவும் 5.3% அதிகமாகும். மேலும் முதலீட்டாளர்களை குஷிப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் நிர்வாக குழு 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு ரூ.18 அளிக்கபரிந்துரைத்துள்ளது. இதோடு ஈவுத்தொகை அளிப்பதற்கான பதிவு நாள் மே 7, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹெச்சிஎல் மார்ச் காலாண்டில் 2.290 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டு உள்ளது. இதில் 21 பெரிய ஒப்பந்தங்கள் அடங்கும். இதில் 13 சேவைத் துறையில், 8 மென்பொருள் துறை சார்ந்த ஒப்பந்தங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News