T-20 தொடரில் நான்காவது போட்டியில், இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்டு கோஸ்டில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 167/8 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் 18.2 ஒவரில் 119 ரன்னுக்குஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்தியா, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் (21 ரன், 2 விக்கெட்) வென்றார். ஐந்தாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
0
Leave a Reply