25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  துளிஅமைப்பின் மூலம் கலசலிங்கம் பல்கலைக்கழகமாணவிகள் நடத்திய ஊட்டச்சத்து உணவு vs செயற்கை சுவை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி  பள்ளிமாணவர்களுக்குநடத்தப்பட்டது.  பள்ளித்தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள்நிகழ்ச்சியை தலைமை தாங்கி விருந்தினரை கவுரவும் செய்ய பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி,  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. உணவின்முக்கியத்துவம், துரித உணவால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி PPT மூலம் தெளிவாகவிளக்கினார்கள்.Interaction, கேள்வித்தாள் அமர்வின் மூலம் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். எதைக்கண்டு நாம் துரித உணவு அல்லதுசெயற்கை உணவு நோக்கி நகர்கிறோம் என்பதை படவிளக்கம் மூலம் அறிவுறுத்தினார்கள். மாணவர்களைஉற்சாகப்படுத்த ,ஓவியப் போட்டியும் நடத்தி, சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து  பரிசுகள் வழங்கினர். இது பள்ளி மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த முன்னெடுப்பாக நாளைய தலைமுறைக்கு இந்தநிகழ்வு அமைந்தது. பல மாணவர்கள் இனிமேல் Junk Food எடுப்பதில்லை என, உறுதி மொழியும்எடுத்துக்கொண்டது, நிகழ்வின் வெற்றிக்கான அறிவுரையாக அமைந்தது. கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ,எங்கள் நன்றிகளும், வாழ்த்துக்களும். வளர்ந்த மாணவர்கள் ,வளரும் மாணவர்களுக்கு ,இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, தன்னையும் ,அடுத்த தலைமுறையையும், சிறந்தபாதையில் கொண்டு செல்லும். ஆசிரியர்பூங்கோதை நன்றி நவில விழாஇனிதே நிறைவு பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News