25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அதிசய கேலக்ஸிகளுள் ஒன்று NGC 253. .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிசய கேலக்ஸிகளுள் ஒன்று NGC 253. .

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் உள்ளன. நம்மால் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரிய கேலக்ஸிகளுள் ஒன்று NGC 253. இது பூமியிலிருந்து 1.15 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

 1783ஆம் ஆண்டு கரோலின் ஹெர்செல் எனும் ஜெர்மனிய விண்வெளி ஆய்வாளர் இதைக் கண்டுபிடித்தார். இதற்கு வெள்ளிக் காசு கேலக்ஸி, வெள்ளி டாலர் கேலக்ஸி முதலிய பெயர்கள் உள்ளன.

மிக அதிக அளவில் நட்சத்திரங்கள் உருவாகி அழிகின்ற கேலக்ஸிகளுள் இதுவும் ஒன்று. முதன்முறையாக உலகஅறிவியல் வரலாற்றில் இதைத் துல்லியமாகப் படமெடுத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

தென் அமெரிக்க நாடான சிலியின் அடகாமா பாலைவனத் தில் உள்ள,.ஐரோப்பிய தெற்கு கோளரங்க ஆய்வகத்தின் (ஈஎஸ்ஓ) மிகப் பெரிய தொலைநோக்கி (விஎல்டி). இதைக் கொண்டு வெள்ளிக் காசு கேலக்ஸியைப் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தில் 500 நட்சத்திரங்கள் உருவாவது பதிவாகி உள்ளது.

ஒரு கேலக்ஸியில் அதிகபட் சம் 100 நட்சத்திரங்கள் உருவாகலாம். அதற்கு மேல் இதுவரை பதிவாக வில்லை. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது.

இந்த கேலக்ஸியின் படத்தை எடுக்க விஞ்ஞானிகளுக்கு 50 மணிநேரம் தேவைப்பட்டது.ஏனென்றால் இந்த கேலக்ஸி 65,000 ஒளி  யாண்டுகள் அகலமானது. ஒரே நேரத்தில் இவ் பெரிய கேலக்ஸியை  படமெடுப்பது கடினம். அதனால் இதன் ஒவ்வொரு பகுதியையும்  தனித்தனியாக 100 படங்கள்   பிடித்து அவற்றை  இணைத்துள்ளனர்.

 இந்த ஆய்வு பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள உதவும். வருங்காலங்களில் இந்த கேலக்ஸியில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, வாயுக்கள் எப்படி நகர்கின்றன என்ற ஆழமான ஆய்வுகள் நடத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News