ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் .
நகராட்சிதலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கல்பனா, ஆணையாளர் நாகராஜன், செயற்பொறியாளர் முகமது செரிப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வாய்ப்புத்தொகை மற்றும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தலைவர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவுன்சிலர்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக மக்களிடம் தவறான தகவல் பரவுகிறது.. மேலும் சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவதால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply