சென்னை டென்னிசில் ராம்குமார்-மைனேனி காலிறுதிக்கு முன்னேறியது.
டென்னிஸ்
ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் சென்னையில் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்ஸ், துருக்கியின் எர்கி கிர்கின் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி, ஜப்பானின் ஹோண்டமா, ஒகமுரா ஜோடியை எதிர் கொண்டது.
முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-7 என வென்றது. முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா ஜோடி 5-7, 6-2, 10-7, என்ற, கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.
டேபிள் டென்னிஸ்
சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில்,ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-6', இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, ஹாங்காங்கின் வாங் சுன் டிங், இயு குவான் ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-8 என வென்றது.தொடர்ந்து ,இந்திய ஜோடி, மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply