25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தின விழா 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தின விழா 

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தின விழா  பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மதுமிதா அவர்கள் கலந்து  கொண்டார்கள்.

பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்ய தாளாளர் திருமதி.ஆனந்தி,அவருக்கு சிறப்புப்பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில்  கூறியதாவது,

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்வார்களோ அதைத்தான் பள்ளி தாளாளர் ஆனந்தி அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அவரும் ஒரு ஆசிரியரே எனக் கூறி ஆசிரியர் தின வாழ்த்துகள் கூறினார்.

இப்பள்ளியில் பாடங்களுடன் மற்றத் திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கின்றனர். 

மேலும் கல்வி தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. வாய்ப்பை பயன்படுத்திய தலைமுறையும் உண்டு. தவறவிட்ட தலைமுறையும் உண்டு. இப்பொழுது வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நாம் தான்  அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

உங்கள் passion என்ன என்று தேடுங்கள். Passion பிறப்பில் வருவதும் இல்லை. நடுவில் வருவதும் இல்லை. அது எப்போது  வேண்டுமானாலும் வரலாம்.

நிலவைப் பார்த்து சோறு ஊட்டிய காலம் போய் நிலவுக்கே சென்று  சோறு சாப்பிடும்  காலத்தில் வாழ்கிறோம். ஆதலால் தோல்வியை கண்டு துவளக் கூடாது. நம்மை நாமே குறைவாக எண்ணக் கூடாது.

நேற்றைய தினத்தை விட இன்று வளர்ந்து இருக்கிறோமா? இன்றைய நாளை விட நாளை வளர்வதற்கு என்ன செய்யப் போகிறோம்? என சிந்திக்க வேண்டும் என்று அழகாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

விழாவில் மாணவர்கள் உரைவீச்சு, சேர்ந்திசைப் பாடல், ஆசிரியர்களின் சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். 

நிகழ்வில்  நிர்வாக அலுவலர் திரு. வெங்கடப்பெருமாள், திருமதி. பிரபா ராமராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  ஆசிரியர்கள் மிக அழகாக விழாவினை ஒருங்கிணைக்க நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News