மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (17.03.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 65 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6800- வீதம் மொத்தம் ரூ.4.42 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இராஜபாளையம் வட்டம், சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜோதிமுத்து என்பவரின் மகன் காந்தி பாண்டி(வயது 14) கண்மாய் கலிங்களில் சிக்கி மரணமடைந்ததால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளையும்,மாவட்ட தொழில் மையம் சார்பில், மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்திருந்தவர்களில், திருத்தங்கலைச் சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருடைய விண்ணப்பம் அண்ணல் அம்பேத்கர் தொழில் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ரூ.3.57 இலட்சம் கடன் வழங்கப்பட்டு, அதற்கான ரூ.1.27 இலட்சம் மானியத்தொகையினையும்,பாலவநத்தத்தைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேஷன் என்பவருடைய விண்ணப்பம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ரூ.5 இலட்சம் கடன் வழங்கப்பட்டு, அதற்கான ரூ.1.25 இலட்சம் மானியத்தொகையினையும்,
என ஆக மொத்தம் ரூ.7.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply