சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 139 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(13.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 130 பெண்களுக்கும் மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 குழந்தைகளுக்கும் என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்க்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்" உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தில் தற்போது வரை 19,217 பெண்கள் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.
இந்நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டுள்ள பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தையல் பயிற்சி பயின்ற 127 பெண்கள் மற்றும் உங்களுடன் எஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனு அளித்த 2 பெண்கள் என 129 பெண்களுக்கு தையல் இயந்திரம் ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பெண்களுக்கு ரூ.6,77,927/-மதிப்பீட்டின் கீழ் தையல் இயந்திரங்களையும்,கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் கீழ் தையல் தொழில் துவங்கிட மாவட்ட தொழில் மையம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.50,000/- மானியத்தினையும்,முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் 5 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் புதிய வைப்புத் தொகை இரசீதுகளையும் (New Deposit Receipt), பயனடைந்து 18 வயது பூர்த்தியடைந்த 4 பயனாளிகளுக்கு (Maturity Amount) ரூ.1,28,800/- மதிப்பிலானமுதிர்வு தொகைக்கான காசோலைகளை என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply