25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு   முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  அமைச்சர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) சிவகாசி வட்டம், நெடுங்குளம்  தனியார் பட்டாசு ஆலையில் 26.04.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி மாரியம்மாள் என்பவரது வாரிசுதாரரான திரு.முனிச்செல்வம் என்பவருக்கும், வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி திருவாய்மொழி என்பவரது வாரிசுதாரரான திரு.ராமர் என்பவருக்கும், சிவகாசி வட்டம் மங்கலத்தைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி என்பவரது வாரிசுதாரரான திரு.முத்துச்சாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருமதி பாக்கியலட்சுமி என்பவரது வாரிசுதாரரான திரு.துரைராஜ் என்பவருக்கும் தலா ரூ.4 இலட்சம் வீதமும்,

வெடி விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமசுப்பு மற்றும் ரெங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் வீதமும்,

லேசான காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள், கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி, திருமதி பாத்திமுத்து மற்றும் திருமதி ராபீயா பீவி ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதமும் என வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில்  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News