25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர  விழிப்புணர்வு  ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில்  (08.03.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில்,  சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர  விழிப்புணர்வு  ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த மராத்தான் போட்டியானது காலை 6.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவுவாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்த மராத்தான் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி வசந்தி மற்றும் அவரது மகன் செல்வன் மணிகண்டன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.30,000/-மும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி சங்கரேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் செல்வன்.குருராகவ் மற்றும் குருசரண் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.25,000/-மும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமதி ரதி மற்றும் அவரது மகன் செல்வன் ஹரிஷ் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.20,000/-மும், விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி கனகலெட்சுமி மற்றும் அவரது மகன் செல்வன் காமேஷ்குரு அவர்களுக்கு நான்காம் பரிசாக ரூ.15,000/-மும், மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் தங்கேஸ்வரன் என்பவருக்கு ஐந்தாம் பரிசாக ரூ.10,000/-மும் என வெற்றிப்பெற்ற 5 தாய்மார்கள் மற்றும் அவரது மகன்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், அனைத்து தாய்மார்கள் மற்றும் அவர்களது மகன்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *